Tuesday, September 18, 2012

INTERVIEW: NEERAJ JAIN - “Fighting for the Right to Life”

India’s Anti-Nuclear Energy Peoples’ Movement

( September 16, 2012, Chennai, Sri Lanka Guardian) NEERAJ JAIN is the convenor of Lokayat, a social activist group in Pune, Maharashtra that is part of the all-India National Alliance of Anti-Nuclear Movements (NAAM). Jain, who trained in electrical engineering, is the author of Nuclear Energy: Technology from Hell (Aakar Books, Delhi 2012). He was interviewed by B. Skanthakumar on 5 September 2012, before the confrontation five days later during fuel-loading of the Koodankulam nuclear reactor, in which one fisherman was shot dead and dozens were injured, sparking strikes and agitations across Tamil Nadu, including in Chennai, Coimbatore, Erode and Thootukudi.

What is the background to the upsurge of peoples’ movements against nuclear energy in India today?

The Indian National Congress-led government is going for nuclear energy in a big way, claiming that it is cheap, clean and safe, and the solution to the country’s energy needs.

This expansion of nuclear energy is a follow-up to the Indo-US nuclear deal [in 2008]. The Indian government agreed to buy US$150 billion worth of nuclear reactors, equipment and other materials from the United States of America (US) in return for the US inking the agreement. Indian Prime Minister Manmohan Singh's special envoy, Shyam Saran, also promised that US companies would benefit for decades from Indian orders for military equipment. The quid pro quo was for the US to modify its laws and allow India to engage in nuclear commerce; from which it had been blocked after its nuclear tests in 1974.

The US also lobbied with the Nuclear Suppliers Group (NSG) – which is an association of 45 countries which export uranium and nuclear technology – to grant India the waiver to engage in civilian nuclear trade, despite not having signed the Nuclear Non-Proliferation Treaty (NPT). In return, the Indian government promised the NSG countries that their companies would receive lucrative contracts in India. This was candidly admitted in an article in a leading newspaper of Maharashtra by the former chief of India’s Department of Atomic Energy, Anil Kakodkar.

This is the real reason behind the Indian government opening its doors to Western nuclear energy companies. After putting the country on sale, it is now strutting about claiming that it has become a 'nuclear super-power', in addition to its claim to having become an 'economic super-power’.

The government of India is setting up two kinds of nuclear plants.

One group consists of those that are being established all along the coastline with imported reactors, which will be among the biggest plants in the world. These so-called ‘nuclear parks’ are in Gujarat (Mithivirdi), in Maharashtra (Jaitapur), in Tamil Nadu (Koodankulam), and in Andhra Pradesh (Kovvada). There was another plant proposed in West Bengal but a powerful peoples’ movement has halted it – temporarily at least – and possibly for good. There are also plans to build a nuclear plant at Markandi (Pati Sonapur) in Orissa.

Ironically, despite the free market rhetoric of the Indian elite, there has been no competitive bidding for any of these plants. Instead, the government has allotted these plants to different foreign companies; even before the terms of the reactor contracts have been negotiated and the price finalised!

In Jaitapur – where the French company Areva is setting up the plant – 940 hectares of land has been acquired from 2,300 families. The people who owned the lands refused to sell it, and so the government stepped in and forcibly acquired it invoking British colonial-era laws that allow acquisition of land for ‘public purposes’. When the Indian Prime Minister was asked the price of the reactors, he replied that pricing issues are still “subject matters of negotiations”! These extraordinary procedures give rise to suspicion of underhand deals. The plants in Andhra Pradesh and Gujarat are to be built by US companies GE Hitachi and Westinghouse; while the Koodankulam plant in Tamil Nadu is being built by a Russian company, Atomstroyexport.

The other group of plants are the indigenous projects that are being set up by the Indian government in the interior of the country in places such as Gorakhpur (Haryana state) where four small reactors will be constructed – India only has the capacity to independently build small-scale plants – and in Chutka (Madhya Pradesh state).

The nuclear reactors to be set up at the four nuclear parks along the coast are giant-sized and will produce between 1,000 and 1,600 megawatts each. The Jaitapur plant, where six reactors of 1,650 megawatts each are to be built, is going to be the biggest nuclear plant in the world. The EPR reactors being set-up here are of unproven design and are not in operation anywhere in the world.

Nuclear energy is not a new source of energy in India though, so what accounts for the size and spread of the anti-nuclear energy movement recently?

India has for sometime had nuclear energy power plants: 20 small scale plants, mostly of 220 megawatts each, at six different locations in the country. The first Indian plant was set-up in 1969 in Tarapur near Mumbai (formerly known as Bombay).

The anti-nuclear movement in India is very old. The movement was especially strong in Kerala state, where no plants have ever been constructed because of the strength of opposition. The people of Kerala have forced the cancellation of the two plants proposed to be set up there. The construction of many other plants also saw powerful movements in opposition to them, in which protestors have died because of police violence. However, in the pre-internet age, and when the Indian media (radio and television) was under the control of the State, there was little information about these struggles. It is only receiving attention nationally and internationally now, thanks to advances in information and communications technology, as well as due to the growing strength of the movement through greater awareness of the dangers of nuclear energy among the people.

The present anti-nuclear movement should therefore be seen as a continuation of these older struggles. Many of the leading activists in the current movement such as the nuclear scientist Dr. Surendra Gadekar, and Dr. S. P. Udayakumar of the Peoples’ Movement Against Nuclear Energy (PMANE), have been active for the last 10 or 20 years, and have been involved in the past agitations against nuclear plants.

Additionally, there are several new factors which are contributing to the growing intensity of the anti-nuclear movement all over the country. These include the scale of the proposed plants along the Indian coast, which are massive even by international standards, and where the reactors are five to eight times larger than current Indian reactors; the controversial nature of the foreign companies concerned, such as Areva; and the safety record of those companies.

For example, even pro-nuclear countries such as Britain and the United States have expressed serious reservations about the design of Areva's EPR reactor, and have not given it clearance to construct such reactors in their countries. The Russian VVER-1000 reactors being constructed in Koodankulam are no better. Even the International Atomic Energy Agency (IAEA), which is a cheerleader for the nuclear industry, has expressed concerns that these reactors don't meet Western safety standards, (which is not to say that Western standards are very good). Due to the huge size of these reactors, they are far more dangerous; and the consequence of a nuclear accident would be devastating and of unimaginable proportions. Obviously, this has contributed to the intensity of the current struggles.

Furthermore, over the years, more and more information has been disseminated to the people on the dangers of nuclear energy. The effects of nuclear energy on communities near the uranium mines and existing plants is also becoming better known, including through independent surveys whose findings are now public knowledge. There is a large increase in cancer deaths and in births of deformed babies, and other health problems caused due to radiation: like diseases of old age in the young, fertility problems, spontaneous abortions, and so on.

Fishing communities are devastated: in Tarapur where once there were 700 boats, now only 20 remain. People agitating against the new nuclear plants have visited these older plants, for example the people of Jaitapur region have visited the people of villages around the Tarapur plant. And so they are aware of the health effects of nuclear plants. Consequently, there are larger numbers of people, and in different parts of the country, participating in these agitations.

Finally, the Fukushima disaster [in Japan on 11 March 2011] has had a major impact on the anti-nuclear sentiment of the people, and has strengthened the arguments of the movement. Even before the tragedy at Fukushima, the anti-nuclear energy movement in India had been quoting prominent nuclear scientists and saying that another accident at a nuclear reactor somewhere around the world would only be a matter of time, as nuclear plants are inherently prone to accidents.

The Koodankulam Nuclear Power Plant is only 250 kilometres from Sri Lanka, but even after Fukushima, the Director of Sri Lanka’s Atomic Energy Authority insisted that “nuclear power plants are the cheapest and the safest mode of generating electricity ... and [that] the probability of a nuclear accident is very rare”.

One of the most powerful propaganda arguments being given by the nuclear industry is that nuclear energy is the solution to the problems of global warming. Apart from the fact that nuclear energy is neither cheap nor safe, the reality is that it is not green too. It is true that a nuclear plant in itself does not produce greenhouse gases; however, the nuclear reactor cannot be viewed in isolation. The production of electricity by fissioning uranium depends upon a vast and complex process known as the nuclear fuel cycle, of which the nuclear reactor is only a part. And, the fact is, large quantities of fossil fuels are utilised during all the stages of the nuclear fuel cycle.

The nuclear fuel cycle starts from the mining of uranium ore; the ore is then taken to the mill to extract uranium from the ore; next, the uranium is enriched; the enriched uranium is then fissioned in the nuclear plant; the plant generates huge quantities of radioactive waste which has to be safely stored for thousands of years; and finally the reactor has to be decommissioned after it has completed its life-span of between 40 and up to 60 years.

All these processes are highly energy consuming, in which huge amounts of fossil fuels are burned. For instance, building the reactor itself requires huge amounts of cement and steel; and the manufacturing process of steel and cement releases large quantities of greenhouse gases. The worst part is that the nuclear waste generated in the reactor has to be stored for thousands of years, that is, for so long as it continues to emit significant amounts of radiation. Obviously, the safe storage of the waste is going to consume large amounts of energy – no one knows how much.

The pro-nuclear propaganda conveniently forgets the whole nuclear cycle and only focuses on the functioning of the nuclear reactor itself. Therefore, neither is nuclear energy green, nor is it the solution for the global warming crisis.

The most critical issue is that nuclear energy is not safe at all. During the process of making electricity from uranium, that is, during the entire nuclear fuel cycle – in the mining of uranium, followed by purification and enrichment, and then in the reactor itself – radiation is released at every stage into the atmosphere. The impact of this radiation on human beings is deathly: it causes cancer, mutates the reproductive genes so that children are born deformed, and also causes many other diseases.

Let us consider the nuclear reactor itself. The process of splitting uranium in nuclear reactors creates more than 200 new, radioactive elements that didn’t exist earlier in nature. The resulting uranium fuel is a billion times more radioactive than its original radioactive inventory. A regular 1,000 megawatt nuclear power plant contains an amount of radiation equivalent to that released by the explosion of 1,000 Hiroshima-sized bombs.

These radioactive elements created in the reactor have half-lives of varying length from a few seconds to thousands and tens of thousands of years. Despite all the safeguards that are in place, it is impossible to prevent leakage of some amount of these radioactive elements into the atmosphere. Some of them inevitably leak out. They leak out in gaseous form and they leak out along with the steam discharged by the reactor. In fact, nuclear power plants are officially allowed to emit a defined (‘permissible’) amount of radiation.

These elements are dispersed into the environment and will keep releasing radiation for hundreds and thousands of years. They will contaminate the water and soil, and will inevitably enter the food chain.

Now, the nuclear plant will be decommissioned after around 40 to a maximum of 60 years; but because these radioactive elements can remain in the eco-system for thousands of years, countless generations of people living in its vicinity will be poisoned by radiation, long after all trace of the power plant itself has gone.

It should be emphasised that this process cannot be undone; because radiation will be present in the air we breathe, the water we drink, and the soil we cultivate for our food. There is no known means of decontaminating our eco-system. The only option for human beings is to flee from those areas and abandon them altogether.

Turning to the issue of nuclear waste: a 1,000 megawatt nuclear power plant produces 30 tonnes of radioactive waste in a year. So, for example, the 10,000 megawatt Jaitapur plant will produce 18,000 tonnes of waste over its maximum life of six decades. This waste is the most toxic substance known to human-kind. For instance, one percent of it is plutonium, which has a half-life of 24,000 years, and so will remain radioactive for 200,000 years. It is so carcinogenic that less than one-millionth of a gram, if inhaled, will cause lung cancer. The nuclear waste is so radioactive that humans cannot approach or handle it – it has to be removed by robots.

Now, how do you store this nuclear waste in such a way that humans do not come into contact with it? How do you store something that is so corrosive, that is at such high temperature, and emitting such intense radiation? How do you store nuclear waste safely for even 200 years, leave alone 200,000? How can you guarantee that the container in which the waste is stored will survive even 200 years? Material science is only 100 years old, and if you make such a container which you claim will last 200 years, how do you know that it will?

That is why around the world, the current practice is to store the waste in temporary storage sites near the reactors, either in huge cooling pools or in dry storage casks. And everywhere these storage facilities are leaking; to contaminate the environment for innumerable generations. Of course, with time, as the volume of leakage increases, so does the level of radiation.

Finally, let us consider the possibility of a major nuclear accident. Nuclear plants are inherently prone to accidents. Many nuclear scientists have emphatically stated that with nuclear technology, you can't guarantee that accidents will not take place. The event of a nuclear accident is a singular catastrophe because it affects tens of thousands of people (at the minimum), and remember, for thousands of years. So, even one such accident cannot be afforded by humanity.

The Chernobyl nuclear accident [on 26 April 1986 in present Ukraine] affected half of the globe. A study published by the New York Academy of Sciences in 2009 estimates that 1,000,000 (one million) people have died worldwide over the period 1986-2004 due to diseases caused by radiation releases from this disaster. And this number will keep increasing in the years to come.

In the case of Fukushima, a greater tragedy was averted because much of the radiation was dispersed over the sea. Even then, recent studies in Tokyo, which is around 240 kilometres from the site of the nuclear accident, have shown that radiation from Fukushima has contaminated that city and the millions who live and work in it. Independent scientists from Europe and the US have estimated that there will be at least a million cancers in Japan over the next 30 years as a direct result of the accident at the Fukushima nuclear power plant. Radiation has spread from Japan to around the world; traces have been detected as far away as in Switzerland and the US.

India, which is far more populous than the former Soviet Union and Japan, has not even been able to cope with the Bhopal Gas disaster [the leak of methyl isocyanate gas on 2-3 December 1984 in Bhopal in Madhya Pradesh state believed to have caused at least 20,000 deaths and injury to around 570,000], and the rehabilitation needs of those affected. How can India, or for that matter Sri Lanka, cope with a nuclear accident?

The peoples’ movement in Koodankulam is under severe repression but continues to inspire anti-nuclear struggles in the rest of India and around the world.

The anti-Koodankulam struggle is probably one of India’s largest social movements in recent years. Between 60,000 to 70,000 people have so far participated in this agitation. It is a Gandhian non-violent movement of resistance. The people mobilised are extremely well-informed of the hazards of nuclear energy. The activism and bravery of the women, in particular, has been the subject of many short films and media reports.

The villagers living around Koodankulam are well-aware of the issues because there is an existing nuclear power plant in Tamil Nadu state (in Kalpakkam). They know the health impact of the Kalpakkam nuclear plant on the people living in the nearby villages. So, the dangers and the consequences are understood. They know that pro-nuclear energy scientists are lying to them because the claims that they make for nuclear power are so absurd.

The nuclear energy lobby refuses to engage in debate with its opponents, which causes people to believe that it has something to hide. It refuses to release scientific reports on the safety of the plants; it refuses to release the site evaluation report; it refuses to conduct environmental impact assessment on the flimsy argument that the Koodankulam plant had been approved in 1988, when the law providing for environmental assessment for large projects was not in force. Yet, they claim that the plant is safe. So, how can the people in the area believe them?

The Indian government has stated that in accordance with an agreement with Russia, the Russian company building the reactor will not be liable for any accident in the reactor, implying that the Indian government will bear the health and environmental costs. If the plant is so safe, people ask, then why do the manufacturers want to indemnify themselves from liability for accidents?

Unfortunately, the massive propaganda campaign in the rest of Tamil Nadu (which is badly affected by power shortages), including deploying former Indian President and missile scientist APJ Abdul Kalam, has succeeded in convincing people living in areas far away from the plant that nuclear power energy is feasible and desirable.

The government has engaged in a smear campaign to discredit the ‘Peoples Movement Against Nuclear Energy’ in Koodankulam, describing it as funded by western non-governmental-organisations; and emphasising the Christian faith of the fisher-people at the forefront of the movement, as well as the participation of the local Catholic clergy.

The government has clamped down heavily on the protestors against the Koodankulam plant. The main site of the agitation is the village of Idinthakarai which is six kilometres from the power plant. The protestors have been virtually encircled by the police who have blocked the access roads into their village, and created bunkers using sand-bags to fortify their positions. False cases under the Indian Penal Code have been filed against more than 56,000 protestors; the charges include 'sedition' and ‘waging war against the state’. The leaders of the movement have not left the village in months, because they expect to be arrested by the police if they do so. The leaders are surrounded by several thousands who are protecting them from any attempt by the police to arrest or otherwise harm them.

The only region in the world where nuclear power plants are presently being constructed is in Asia. New plants are proposed or are under construction in China, South Korea, Bangladesh, Pakistan, and of course, India. Therefore, there is a strong need for Asian people to come together to support each other. We need to block companies in our countries that are producing components or supplying materials for the construction of nuclear plants in other countries: for instance, Japanese and South Korean companies are engaged in nuclear commerce with other Asian countries. We also need to link up with activists in Western countries. Australian people should demand that the uranium mined there not be exported for nuclear energy. We also want anti-nuclear activists from Western countries, especially scientists and legislators, to come to India and link-up with the movement here. Their solidarity can be used to counter the pro-nuclear propaganda in the mainstream media.

Nuclear energy is not a national issue – it is a global issue; because radiation and the effects of nuclear accidents do not respect state boundaries. A nuclear accident can radioactively contaminate half the globe.

The people protesting in Koodankulam are not only fighting for their health and livelihoods; they are not only fighting for the peoples’ of India; they are fighting for the right to life of the peoples’ of the entire world, and for the healthy lives of our unborn generations. It is the duty of all conscious human beings, wherever they are, to join the struggle against nuclear energy.
-----------
Source: Sri Lanka Guardian on September 16, 2012 | 11:34 AM

Sunday, September 16, 2012

படைப்பாளிகள் கையெழுத்து இயக்கம் சம்பந்தமாக என் நிலைபாடு!


கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டங்கள் மீது அரசு வன்முறையை ஏவியுள்ளதை கண்டித்தும், அணு உலை எதிர்ப்பாளர்களின் கோரிக்கையை ஆதரித்தும் படைப்பாளிகள், கலைஞர்கள், பத்திரிக்கையாளர்களிடம் கையெழுத்து கேட்டு கவின்மலர் முகநூலில் அறிவித்திருந்தார். இவ்வகை அடையாளங்களில் இல்லாமல் போனாலும் அணு உலை எதிர்ப்பவன் என்ற வகையில் எனது கையெழுத்தை நானாகவே பதிவு செய்ய கேட்டேன்.

பின்னர், அவ்வறிக்கையில் கோரிக்கைகளில் பகுதியில் கீழே நீல நிறத்தில் இருக்கிற பத்தியை சேர்க்க குறிப்பிட்டேன். அது சேர்க்கப்பட்டது. அதன் பிறகும், இவ்வறிக்கையில் போராட்டத்தின் வரலாற்று சுருக்கத்தையும், அரசியல் நிலைபாட்டையும் தெளிவுபடுத்தாத பெருங்குறையை உணர்ந்து நேற்று அதை கவின்மலருக்கு முகநூல் செய்தியில் தெரிவித்து, அதற்கான பகுதியை இணைக்க கேட்டிருந்தேன். பரிந்துரைக்கிற சேர்க்கையை அனுப்ப சொன்னார் கவின்மலர். அதனடிப்படையில் அறிக்கையில் சேர்க்க இன்று நான் அனுப்பிய பகுதி கீழே சிகப்பு நிறத்தில் உள்ளது.

அதற்கு,

//நீங்களனுப்பிய குறிப்பில் வரலாற்றுத்தகவல்கள் இருந்ததால் தொடங்கிய காலத்தில் இருந்தே எதிர்த்துவரும் ஞாநி அல்லது மார்க்ஸ் யாரிடமாவது கருத்து கேட்கச் சொல்லியிருந்தார் கவிதா. அதன்படி அவருக்கு உங்கள் குறிப்பை அனுப்பியிருந்தேன். அவரிடமிருந்து வந்த பதில் இதோ..குறிப்பை சரிபாருங்களேன்.// என்று கவின்மலர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

அந்த மின்னஞ்சலில்: "1986-87ல் திட்டம் அறிவிக்கப்படதுமே எதிர்ப்பு தொடங்கிவிட்டது. நான் இடிந்தகரை கூட்டத்தில் பேசியதே செப்டம்பர் 22, 1987ல். எனவே 1989 என்பது தவறு." என்று ஞானி குறிப்பிட்டதாக இருந்தது. 

முதற்கட்ட போராட்டம் நடந்த காலத்தில் பங்காற்றிய என் நினைவிலிருந்து எழுதியதில் ஏற்பட்ட தகவல் பிழை என்பதை தெரிவித்திருக்கிறேன்.

அனுப்பியுள்ள சேர்க்கைக்கு குழுவின் நிலைபாடு பற்றி முகநூல் செய்தியில் கேட்ட போது முதல் மூன்று பத்திகளை சேர்க்கலாமென்று தோழர். பா.ஜெயபிரகாசம் சொன்னதாக கவின்மலர் தெரிவித்தார்.  

அதற்கு "அரசியல்கட்சிகளின் நிலைபாடு குறித்த பத்தியும் முக்கியமானதாக கருதுகிறேன். அத்தகைய நிலைபாட்டை எடுக்காத அறிக்கையில் இணைய எனக்கு விருப்பமில்லை. மற்ற பகுதிகளும் மக்களின் கேள்விகள் குறித்த முக்கியமானவை." என்ற பதிலளித்திருக்கிறேன்.

அணு உலை எதிர்ப்பு என்பது அரசியல் நிலைபாடாக கருதுகிறேன். அதனடிப்படையில் தெளிவான ஒரு பார்வையை வழங்குவது "படைப்பாளிகள், கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், செயல்பாட்டாளர்களின்" சமூகக் கடமை. அந்த வகையில் இந்த சேர்க்கையை முக்கியமாக உணர்கிறேன். அதனடிப்படையில் எனது நிலைபாடு அமைகிறது.

இக்குழுவில் யார் செயல்படுகிறார்கள் என்பதும் தெரியவில்லை. இந்த நிலையில், அனுப்பியுள்ள பகுதிகளை இணைக்காது அரசியல் நிலைபாட்டை தெளிவுபடுத்தாத அறிக்கையாக இருக்கும் பட்சத்தில் எனது பெயரை விலக்கிக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

அணு உலையை எதிர்க்கிற எனது நிலைபாடு எப்போதும் போல தொடரும். 

- யோ. திருவள்ளுவர்

----------------------------------------------------------------------------

கவின்மலருக்கு அனுப்பியுள்ள சேர்க்கை (சிகப்பு வண்ணத்தில்) அறிக்கை:
 (போராட்டம் துவங்கிய ஆண்டு பிழை திருத்தம் செய்வதற்கு முந்தைய நிலையில்) 


"நவம்பர் 20, 1988ல் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அரசு சோவியத் ரசிய சோசலிச குடியரசுடன் ஒப்பந்தம் செய்து கூடங்குளம் அணு உலை திட்டத்தை அறிவித்தது. அப்போது முதல் அத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் பல கட்டங்களாக மக்களால் நடத்தப்பட்டன. அணு உலையினால் ஏற்படுகிற கதிரியக்க ஆபத்தின் அழிவுகள் மற்றும் வாழ்வாதார பாதிப்புகள் மக்களுக்கு கவலைதருகிற முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. அதனால் ஆபத்தான அணு உலை திட்டத்தை கைவிட்டு, மாற்று மின் திட்டங்களை முன்னெடுக்க ஆரம்ப காலம் முதல் மக்களும், மாற்று அறிவியலாளர்களும் அரசுக்கு கோரிக்கையாக முன்வைத்து வருகின்றனர். மக்களின் நியாயமான கோரிக்கைகளையும், சனநாயகக் குரலையும் துவக்கம் முதல் அரசு கண்டுகொள்ளவில்லை. அணு உலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவை நடத்த முயற்சித்து மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கூடங்குளத்திற்கு செல்லாமல் மதுரையில் திரு. ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்டி திரும்பினார். 1987ல் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கன்னியாகுமரியில் நடைபெற்ற பல்லாயிரம் மக்கள் கலந்துகொண்ட பேரணியில் தமிழக அரசு காவல்த்துறையை ஏவி துப்பாக்கிச்சூடு நடத்தியது. பின்னர் 1991ல் சோவியத் ரசியாவின் உடைவினால் அத்திட்டம் தொடராமல் இருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பும் தணிந்திருந்தது. பின்னர் 2001ல் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு ரசிய கூட்டமைப்புடன் கூடங்குளம் அணு உலை திட்டத்தை மீண்டும் துவங்கியதும் அதற்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் துவங்கின. இத்திட்டத்தை துவக்கம் முதல் இடிந்தகரையிலும், இடிந்தகரைக்கு வெளியேயும் மக்கள் எதிர்த்து போராடியதை மறைக்க பொய் பிரச்சாரங்கள் அணு உலை ஆதரவாளர்களால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. 

கூடங்குளம் அணு உலையை சுற்றியுள்ள பகுதிகளில் வாழுகிற மக்களின் கருத்துக்களையும், ஒப்புதலையும் பெறாமலே எதிர்ப்பு குரல்களை கண்டுகொள்ளாமல் ரசிய கூட்டமைப்பின் உதவியுடன் 1000 மெகா வாட் உற்பத்திக்கான 2 அணு உலைகளை இந்திய அரசு கட்டியது. நேரடியான பாதிப்பிற்குள்ளாகிற அம்மக்களின் கேள்விகளுக்கு இதுவரையில் உரிய தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் இல்லை. இந்த அணு உலைகளின் தினசரி கதிரியக்க அளவு, அணு உலை கழிவுகளின் அளவு மற்றும் அவற்றை பாதுகாக்கிற முறை, அணு உலைக்கு தேவைப்படுகிற நீரின் அளவு, அணு உலையிலிருந்து வெளியேறி கலக்கும் நீரினால் கடல் மற்றும் கடல் உணவில் ஏற்படும் விளைவுகள், அணு உலையை செயலிழக்க ஆகும் செலவு மற்றும் அதன் விளைவுகள், ரசியாவின் பொறுப்பு ஆகியவை சம்பந்தமான மக்களின் கேள்விகள் மிகவும் நியாயமானவை. அக்கேள்விகளுக்கு எந்த வெளிப்படையான பதிலையும் வழங்காமல் அரசு அடக்குமுறையையும், பொய் பிரச்சாரங்களையும் கொண்டு அணு உலையை திறக்க முயற்சிக்கிறது. 

ஜப்பான், புக்குசிமாவில் மார்ச் 11, 2011ல் நடைபெற்ற அணு உலை வெடிப்பும், பாதிப்புகளும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை மேலும் வலுவடைய வைத்தது. இதனிடையே ஜூலை 1, 2011ல் கூடங்குளம் முதல் உலையில் சோதனை ஓட்டம் செய்த போது மிகப்பெரிய சத்ததுடன், புகை கக்கியது. அதோடு சேர்ந்து அரசு நிர்வாகம் மக்களிடையே நடத்திய முறையற்ற அவசரகால பயிற்சிகளும் அப்பகுதில் வாழுகிற மக்களின் அச்சத்தையும், கவலையையும் மேலும் அதிகமாக்கியது. அதன் விளைவாக ஆகஸ்டு 11, 2011 அன்று கூடங்குளம் மற்றும் இடிந்தகரை பகுதி மக்கள் அணு உலைக்கு எதிராக தானாகவே போராட்டத்தை துவக்கினார்கள். மக்களின் போராட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் எதிர்ப்பு குரல்களை கண்டுகொள்ளாமல் ஆகஸ்டு 2011ல் அணு சக்தி நிறுவனம் முதல் அணு உலையை செப்டெம்பர் 2011ல் இயக்க இருப்பதாக அறிவித்தது. இந்த நிலையில் செப்டெம்பர் 11, 2011 முதல் தொடர் உண்ணாவிரதம் இடிந்தகரையில் துவங்கியது.

செப்டெம்பர் 21, 2011ல் போராட்டக்குழுவின் பிரதிநிதிகளை மாநில முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்த பிறகு மக்களின் அச்சம் மற்றும் கவலைகளை போக்குவது வரையில் அணு உலையின் பணிகளை நிறுத்திவைக்க தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் இந்திய பிரதமரோடு நடந்த பேச்சுவார்த்தையிலும் மக்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. மாநில அமைச்சரவை தீர்மானம் இயற்றிய நிலையிலும் அணுசக்தி நிறுவனம் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டது. மாநில அரசும் மற்றும் மாவட்ட நிர்வாகமும் அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்வேறு கட்டமாக மாவட்ட நிர்வாகத்தோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையும் மக்களின் கோரிக்கையை அரசு ஏற்காத நிலையில் தோல்வியில் முடிந்தன. 

அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு முன்னர் நிறைவேற்ற அணுசக்தி வாரியம் விதித்திருந்த 17 நிபந்தனைகளையும் கூடங்குளம் அணு உலையில் இதுவரையில் செயல்படுத்தவில்லை. அப்பகுதி மக்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்களுடன் முறையான பாதுகாப்பு நடைமுறை பயிற்சிகள் வழங்கப்படவில்லை. அவசரகால பாதுகாப்பு மற்றும் உதவிகளுக்கான பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்படவும் இல்லை. தமிழக அரசு நியமித்த குழுவும் போராடுகிற மக்களை சந்திக்காமல் அரசுக்கு சார்பான அறிக்கையை வழங்கியது. அணு உலையை சுற்றியுள்ள பகுதிகளில் வாழுகிற மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிப்புகள் குறித்த எந்த ஆய்வுகளும் மேற்கொள்ளவோ, அவை குறித்த தகவல்களோ வெளிப்படுத்தபடவில்லை. இப்படி மக்களின் எந்த கோரிக்கைகளையும், பிரச்சனைகளையும் கண்டுகொள்ளாமல் கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அரசு தயாராவது மக்கள் மீது தொடுக்கிற சனநாயக மறுப்பும், வன்முறையுமாகும். 

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் 1989 முதல் வன்முறையில்லாத மக்கள் போராட்டமாக நடைபெற்று வருகிறது. ’’கடந்த ஓராண்டாக அறவழியில்  நடந்துகொண்டிருக்கும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரை மக்களின் போராட்டம் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது. சுதந்திர இந்தியா சந்தித்த மக்கள் திரள் போராட்டங்களில் முக்கியமான ஒன்று கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்திய தேசத்தின் ஆன்மாவை நோக்கி வலிமையான கேள்விகளை எழுப்பிய இந்தப் போராட்டம் இன்று அதிகாரத்தின் வன்கரங்களால் நசுக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறது. இந்த நிலையில் மக்கள் விடுதலையில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் போராடும் கூடங்குளம் மற்றும் இடிந்தகரை மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது தார்மீக கடமை என்று நம்புகிறோம்.

எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்களாகிய நாங்கள் இடிந்தகரை மக்களுடன் நிற்கிறோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம். மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்கள் அரசாங்கம் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் ஜனநாயக விழுமியங்களை காற்றில் பறக்கவிட்டு, அறவழியில் நின்று போராடிய இடிந்தகரை மக்கள் மீது இன்று மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் சர்வாதிகார அடக்குமுறையை ஏவியிருப்பதும் , கடந்த செப்டம்பர் 10 அன்று நடந்த முற்றுகைப் போராட்டத்தில் அந்த மக்கள் மீது கண்ணீர்ப் புகைகுண்டு வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்திய காவல்துறையினரின் அராஜகமும், குலசேகரப்பட்டினத்தில் அந்தோணி என்கிற மீனவர் பலியாகக் காரணமான துப்பாக்கிச்சூடும் கடும் கண்டனத்துக்குரியது. போராடும் மக்களின் ஒருங்கிணைப்பாளராகிய சுப உதயகுமாரையும் போராட்டக்குழுவினரையும் மனித உரிமைகளுக்கு புறம்பான முறையில் காவல்துறை நடத்துவதையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பெண்களின் அதிகபட்ச பங்கேற்புடன் நடந்துவரும் இந்தப் போராட்டத்தில் பெண்கள் முன்னணியில் இருப்பதை தொடர்ந்து கொச்சைப்படுத்தும் ஆணாதிக்கப் பேச்சுகளுக்கும் எங்களது கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

“கூடங்குளம் அணு உலைகள் இரண்டும் கட்டப்பட்டுள்ளதால் அவற்றை திறக்க வேண்டும்” என்கிற நிலைபாடு எவ்வகையிலும் ஏற்க கூடியதல்ல. மக்களின் எதிர்ப்பையும் மீறி அணு உலைகளை கட்டிய அரசின் தவறுக்கான தண்டனையை அம்மக்கள் மீது திணிப்பது சரியல்ல. கூடங்குளம் அணு உலை பிரச்சனையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு போன்ற அரசியல் கட்சிகள் மக்களின் நியாயமான இப்போராட்டத்தை ஆதரிப்பதற்கு பதிலாக மத்திய, மாநில அரசுகளின் சனநாயக மறுப்புக்கு துணையாக இருப்பது வருத்தத்திற்கும், கண்டனத்திற்குரியது. இத்தகைய போராட்டங்கள் சனநாயகத்தின் குரல்கள் என்பதை உணர்ந்து மக்களின் பக்கமாக நிற்பதே முற்போக்கான அரசியல் வெளியை உருவாக்கும்.

தமிழக அரசும் இந்திய அரசும் இந்த அராஜகப் போக்கை உடனடியாகக் கைவிட்டு போராடும் மக்களின் தார்மீக உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்க முன்வரவேண்டும் என்றும், இடிந்தகரை பகுதி மக்களின் வாழ்வாதாரங்களைச் சிதைக்கும் வகையில், காவல்துறையினர் நடத்திவரும் அத்துமீறல்களையும், தாக்குதல்களையும் கைவிடவேண்டும் என்றும் மக்களின் கோரிக்கையை ஏற்று அணு உலையில் எரிபொருள் நிரப்பும் முயற்சிகளைக் கைவிட்டு, அணு உலையை மூடவேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இடிந்தகரை மக்களின் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை விலக்கிக்கொள்ளவும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவும், காவல்துறையினரின் தாக்குதல்களால் உண்டான சேதங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவும், வன்முறையை ஏவிய காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடுக்கப்படவேண்டும் என்றும் வற்புறுத்துகிறோம்''

Saturday, September 15, 2012

இடிந்தகரை மக்களின் போராட்டம் ஆக்க சக்தி!


Indian Coast Guard flew very low to threaten the people who stood in the water for their right to live at Koodankulam. Koodankulam people braved the threat. This photo was published in the NBC News website which indicates Koodankulam movement is getting worldwide attention
தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் அவசியமான மின்சார தேவையில் தன்னிறைவை அடைய முடியும். அதற்கு அணு உலைகளே தேவையில்லை. சூரியசக்தி தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்திருக்கிற இக்காலத்தில் ஒவ்வொரு வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்ய முடியும். பஞ்சாயத்துகளில் இதற்கான திட்டங்களை வகுத்து, தேவையான தொழில்நுட்பம், நிதியை வழங்கினாலே போதுமானது. அப்படியான திட்டத்தை உருவாக்குகிற போது மின்கசிவு, மின்சேமிப்பு, மின்சார திருட்டு ஆகிய பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதும் எளிது. தற்போதைய மின் உற்பத்தி முறையானது மையப்படுத்தப்பட்டது. மையப்படுத்தப்படுகிற அதிகாரமும், உற்பத்தி முறையும் ஊழலையும், அடக்குமுறையையும் ஊக்குவிக்கவே பயன்படுகிறது. நமது உற்பத்திமுறையில் மாற்றம் உருவாக வேண்டுமென்று நம்புகிறேன்.

அணு உலை, அனல் உலை, நீர் மின்திட்டம் ஆகியவையெல்லாம் மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறை. அவற்றில் ஊழல், பாதுகாப்பின்மை, சுற்றுச்சூழல் பாதிப்புகள், மின் விரயம் ஆகிய பல பிரச்சனைகளும் உள்ளன. தேவையான மின் உற்பத்திக்கான மிக தரமான சூரியசக்தி உபகரணங்களை ஒவ்வொரு வீடுகளிலும் பொருத்துகிற போது மாதந்தோறும் கட்டுகிற மின்கட்டணமும் மிச்சம். ஆனால் மின் உற்பத்தியில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களும், தயாரிப்பில் ஈடுபடுகிற நிறுவனங்கள் மற்றும் அவற்றிற்கு உரிமையாளர்களாக இருக்கிற அரசியல்வாதிகளும் இத்தகைய திட்டங்களுக்கு தடையாகவே இருப்பார்கள். இன்றைக்கு தனியார் பெருமுதலாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப டீசல், பெட்ரோல் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு மையப்படுத்தப்பட்ட உற்பத்தி, பரிமாற்ற, சந்தைமுறையும், விலையை நிர்ணயித்துக்கொள்ள எண்ணை நிறுவனங்களுக்கு காங்கிரஸ் அரசு வழங்கியுள்ள அனுமதியும் காரணமாகும்.

உலகவங்கி உட்பட பன்னாட்டு நிறுவனங்கள் அரசுகளின் வசமுள்ள மின்சாரம், போக்குவரத்து, குடிநீர் உட்பட அனைத்து சேவைத் துறைகளையும் அரசிடமிருந்து பறித்து தனியாருக்கு வழங்க நிர்பந்தத்தை உருவாக்குகிறது. இன்றைக்கு படிப்படியாக மத்திய, மாநில அரசுகள் சேவைத்துறைகளை தனியார் வசம் ஒப்படைக்கின்றன. உதாரணமாக போக்குவரத்து, மருத்துவம் ஆகியவற்றை குறிப்பிடலாம். சந்தையின் விதிகளை நிர்ணயிக்கவும், கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் அரசு தயாராக இல்லாமல் தனியாரிடம் வணிகமயமாக மாறுகிற போது சேவைகளின் விலையும் அதிகமாகிறது. இன்றைக்கு சந்தைப் பொருளாதாரத்தில் இந்தியாவில் மக்கள் சந்திக்கிற விலையேற்றம், சேவைகளின் தரமின்மை ஆகிய பல பிரச்சனைகளுக்கு கட்டுபாடற்ற இத்தன்மை முக்கிய காரணம். பொருளாதார கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் வராமல் போனால் இன்னும் பல பத்தாண்டுகளுக்கு அரசாங்கம் தனது பொறுப்புகளிலிருந்து விலகுகிற போக்கும் அதன் விளைவாக சேவை மற்றும் பொருட்களின் விலையேற்றமும் பன்மடங்காக அதிகரிக்க இருக்கிறது. குறிப்பாக குடிநீர், மின்சாரம் ஆகியவை தனியார் வசம் கைமாறப்போகிறது. இப்போதே நகர்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் தேவையான தண்ணீரை தனியார் நிறுவனங்கள் அல்லது தண்ணீர் மாபியாக்களிடமிருந்து வாங்குகிற நிலை. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் வினியோகம் செய்கிற குடிநீர் தனியாரிடம் போகும் போது தண்ணீர் உரிமை முற்றாக மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும். அதன் பிறகு அந்த நிறுவனங்கள் நிர்ணயம் செய்கிற விலைக்கு தண்ணீரை வாங்க வேண்டிய கட்டாயமான சூழலும் உருவாகும்.

எரிபொருட்களுக்கு நேர்ந்துள்ள நிலமை மின்சாரத்திற்கு மிக விரைவில் வருகிற அறிகுறிகள் தெரிகின்றன. அணுசக்தி நிறுவனம் இன்றைக்கு அரசின் துறையாக இருப்பினும், அவை உற்பத்தி செய்கிற மின்சாரத்தை மொத்தமாக ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்றுவிட முடியும். ஏற்கனவே மின் உற்பத்தியில் முதலீடு செய்து, மின் வினியோகம் தனியாருக்கு அரசிடமிருந்து பறித்துக்கொள்ள தக்க நேரத்திற்காக அரசியல்வாதிகளும், நிறுவனங்களும் காத்திருக்கின்றன. இந்த கூட்டுக்கொள்ளையில் பாதிப்புகளை அடைய இருப்பது பயனாளர்களாகிய மக்கள் தான். இந்த பிரச்சனைகளிலிருந்து மீள வேண்டுமானால் நாம் மையப்படுத்தப்பட்ட உற்பத்தி, வினியோக முறையிலிருந்து மாற வேண்டும். நமது தேவைக்கான மின்சாரத்தை வீடுகளில் அல்லது கூட்டாக உள்ளூராட்சி அளவில் தயாரிக்கிற திட்டங்களை உருவாக்க அரசை கட்டாயப்படுத்த வேண்டும். இன்னொரு வகையில் சொன்னால் உற்பத்தியை மக்கள்மயப்படுத்துவது. உங்களுக்கு தேவையான மின்சாரத்தை உங்கள் வீடுகளில் சுலபமாக உற்பத்தி செய்ய முடியுமானால் சூரியசக்தி மின்சாரத்தை விரும்ப மாட்டீர்களா? அதற்கான வழிகள் இருக்கிற போது மின்சாரம் என்ற போர்வையில் நிலம், நீர், காற்றை மாசுபடுத்தி அழிவு தருகிற அணு உலைகளை உருவாக்க ஆதரிக்கலாமா?

தற்போதைய மின் உற்பத்தி முறையிலிருந்து நகர்ந்து வீடுகளில் மின் உற்பத்தியை உருவாக்குவதை மாநிலத்தின் இலட்சிய பெருங்கனவு திட்டமாக மாற முடியும். இக்கனவை பற்றிக்கொள்கிற தலைமை உருவாகுமானால் எவருக்கும் அடிமைப்படாத தன்னிறைவான மக்கள் சமூகத்தை தமிழகத்தில் கட்டியெழுப்ப முடியும். அப்துல்கலாமின் அணுகுண்டு கனவு போல அழிவிற்கான பாதையல்ல இக்கனவு.

உண்மையில், அணு உலையை எதிர்த்து போராடுகிற மக்கள் அத்தகைய லட்சிய கனவுடையவர்கள். அணு உலையை எதிர்த்து போராடுகிற மக்களுக்கு இந்த நாட்டின் மக்கள் மீது இருக்கிற சமூக அக்கறை மன்மோகனுக்கும், அணு விஞ்ஞானிகளுக்கும் இருப்பதாக தெரியவில்லை. அணு உலையை எதிர்க்கிற மக்கள் அனைத்து மக்களுக்கான அரசியலையும், தன்னிறைவான நாட்டையும் கட்டியெழுப்பவே போராடுகிறார்கள். அன்னிய நாடுகளின் நிர்பந்தங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகவும் இந்த மண்ணை அனுமதிப்பதை எதிர்க்கிறார்கள். அழிவையும், பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் விளைவிக்கிற அணு சக்தியை எதிர்த்து அவர்கள் எழுப்புகிற முழக்கங்கள் ஒரு கோடி அணுகுண்டுகளை சேர்த்து வைத்தாலும் உருவாக்க முடியாத ஆக்க சக்தியை கொண்டுள்ளது. நீங்கள் அன்னிய நாடுகள் வழங்குகிற அணு அழிவின் பக்கமா? அல்லது அழிவை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக வருமுன் காக்க போராடுகிற மக்கள் பக்கமா?

Friday, August 31, 2012

கூடங்குளம்: சந்தைப் பொருளாதாரக் காலத்தின் நீதிமன்ற அணுகுமுறை

கூடங்குளம் அணு உலைக்கு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் முந்தைய அனுமதியில் 45°C வெப்பம் கழிவுநீர் கடலில் கலக்க அனுமதித்திருந்தது. அதனை 36°C ஆக மாற்ற நீதிமன்றமே ஆலோசனை வழங்கியிருக்கிறது. மாசுகட்டுப்பாடு வாரியம் உத்தரவை மாற்ற ஒப்புக்கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் அந்த வழக்கு ரத்துச் செய்யப்பட்டிருக்கிறது.

மக்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரச்சனைகளும் நிறைந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் நீதிமன்

றத்தின் போக்கு விசித்திரமாக இருக்கிறது. எந்த ஆய்வின் அடிப்படையில் முன்னர் 45°C வெப்பநீர் கழிவை கடலில் கலக்க மாசுகட்டுப்பாடு வாரியம் அனுமதித்தது? வாரியத்தின் அனுமதிக்கு அரசின் அழுத்தங்கள் இருந்தனவா ஆகிய கோணங்கள் கணக்கிலெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

கார்ப்பரேட்களும், அரசும் சம்பந்தப்படுகிற பிரச்சனைகளில் நிலம், கனிம மற்றும் இதர வளங்கள், வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற மக்கள் ஒரு தரப்பாக எதிர்ந்து நின்று போராடுகிற (நர்மதை ஆற்றின் குறுக்கே அணைகளைக் கட்ட பழங்குடி மக்களின் இருப்பிடம், வாழ்வாதாரம் அழித்த பிரச்சனை முதல் கூடங்குளம் வரை) பல வழக்குகளில் சந்தைப் பொருளாதாரக் காலத்தின் நீதிமன்ற அணுகுமுறை கவலை தருவதாக இருக்கிறது.

Thursday, August 30, 2012

அகதிகள் முகாம் போராட்டம்: : செந்தூரனுக்கு வேண்டுகோள்!

உண்ணாநிலை ஒரு போராட்ட தந்திரமென்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். அத்தகைய நம்பிக்கை மக்களின் ஆழ்மனங்களில் பதிந்திருப்பதை அரசதிகாரம் விரும்புகிறது. காந்தியின் உண்ணாநிலை ஒரு அறப்போர் என்று "மகாத்மா" புகழ்தலுக்காக சொல்லப்படுவது இருக்கட்டும். ஆனால் காந்தியின் உண்ணாநிலை அன்றைய காலனியாதிக்க அதிகாரத்திடம் எடுபடவில்லை. அம்பேத்காரையும், காங்கிரசையும் மிரட்ட ஒரு தந்திரமாக மட்டும காந்திக்கு உண்ணாநிலை பயன்பட்டது. காந்தியை கேள்விக்கு அப்பாற்பட்ட வழிபாட்டு நாயகனாக மாற்றியிருக்கிற இந்தியாவும், மாநில அரசுகளும் உண்ணாநிலையை மக்களின் எதிர்ப்பு குரலாக பார்க்கவில்லை. உண்ணாநிலை கோரிக்கைகளுக்காக உடனடி நடவடிக்கை எடுக்கிற நிலையும் இல்லை. அரசு எந்திரத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும் உண்ணாநிலை மீது எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது.

ஆனால் மக்களுக்கான உரிமைகளுக்காக போராடுகிறவர்கள் தொடர்ந்து
உண்ணாநிலையை யுக்தியாக பல போராட்டங்களில் பயன்படுத்தியே வருகிறார்கள். அரசு எந்திரத்திற்கு எந்த நெருக்கடியும் இல்லாமல் தன்னையே வருத்தி சாகக்கொடுக்கிற எந்த முயற்சியையும் போராட்ட வடிவமாக தொடர்வது பயனற்றது. இந்தியாவிடம் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாமல் உயிரை காலத்திற்கு தின்னக்கொடுத்த திலீபனின் எந்த கோரிக்கையையும் காந்தீயம் "பேசுகிற" இந்தியாவும், அதன் அதிகார வர்க்கமும் ஏற்கவில்லை. முத்துகுமார் முதல் செங்கொடி வரையில் பலரும் தீயில் தனது உயிரை வேக வைத்து கோரிக்கைகளை அரசு அதிகாரத்திற்கு வைத்த போதும் அரசு அதன் போக்கிலேயே போகிறது.  

உண்ணாநிலை இருப்பவர்களது கோரிக்கைகளை முறையாக, சரியான நேரத்தில் அரசு கேட்டு, நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்றால் இல்லை. திரட்சி பெற்று வலுவான மக்கள் போராட்டங்களாக மாறுவதற்கான சாத்தியம் அல்லது அரசியல் காரணங்கள் இல்லாத போது உண்ணாநிலையை ஒரு சம்பிரதாய சடங்காக மட்டுமே அரசு எந்திரம் பதிவு செய்து "அவசர ஊர்தியுடன்" காவலர்கள் சூழ காத்திருக்கிறது. உண்ணாநிலை போராட்டங்களை எவ்வகையிலும் கண்டுகொள்ளாத அரச அதிகாரங்களை கொண்ட நாடு இந்தியா என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

உடலை வருத்தி உண்ணாவிரதமிருப்பதையும், உயிர்துறத்தலையும் போராட்ட வடிவமாக நம்புவதிலிருந்து தமிழ் சமூகம் மாற வேண்டும். செந்தூரனின் கோரிக்கைகள் மிக மிக நியாயமானவை. ஆனால் அவற்றை கேட்கும் நிலையில் அரசு அதிகாரம் இருந்திருந்தால் எப்போதோ கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில், செந்தூரனும், அகதிகள் முகாம்கள் குறித்த கோரிக்கைகளுக்காக போராடுபவர்களும் போராட்ட வடிவத்தை மாற்றுவதே சிறந்தது. செந்தூரனின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும்!

Saturday, August 18, 2012

ஜெயமோகனின் காந்தி பக்தியும், அவதூறும்!

"காந்தி: புறவயநோக்கில்" என்னும் கட்'டுரையில் ஜெயமோகன்,

காந்தியைக் கிட்டத்தட்ட ஒரு மதநிறுவனர் இடத்துக்குக் கொண்டு சென்று உட்காரச்செய்துவிட்டது இந்தியமனம். அவரை வழிபடுதெய்வமாக்கி வாழ்க்கையில் இருந்து விலக்கிவைத்துவிட்டது. ’அவர் மகான்’ என்ற ஒரே வரி வழியாகக் காந்தியைக் கடந்து செல்லப் பழகிவிட்டோம்.
 என்கிறார்.

ஆனால் ஜெயமோகனும் காந்தியைக் கடவுளாக, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட அவதாரமாக மிகநுட்பமாக புனைந்து வருகிறார்.
இதே கட்டுரையில்,
அவர் இந்தியதேசிய அடையாளமாக முன்வைக்கப்படுவதனாலேயே இந்திய மைய அரசின் மீதான எதிர்ப்புகள் அனைத்துக்கும் அவர் இலக்காகிறார். அவர் விழுமியங்களின் அடையாளமாக ஆவதனாலேயே அவர் மீறுவதும் மறுப்பதும் கலகம் எனப்படுகிறது. இன்றும் இந்த தேசத்தை ஒரு ஜனநாயக அமைப்பாக நிலைநிறுத்தும் சக்தி அவர் என்பதனால் எல்லா தேசவிரோதக் கூட்டத்துக்கும் அவர் எதிரியாகிறார். அவர் மீதான அவதூறுக்காகக் கோடானுகோடி பணம் அள்ளி இறைக்கப்படுகிறது.
என்கிறார் ஜெயமோகன்.

இந்திய மைய அரசுகளின் மீதான எதிர்ப்புகளை காந்தி மீது தொடுப்பதில்லை. பல்வேறு பிரச்சனைகளில் காந்தியின் அணுமுறையைகள், நிலைபாடுகள் காரணமாகவே விமர்சிக்கப்படுகிறார். சாதி குறித்த காந்தியின் நிலைபாடு, அதையொட்டி அம்பேத்காரை மிரட்ட ஏர்வாடா சிறையில் உண்ணாவிரதமிருந்தது, வைக்கம் வீதி நுழைவுப் போராட்டத்தில் காந்தியின் அணுகுமுறை.... இப்படி பல நிகழ்வுகளை காந்தி குறித்த விமர்சனமாக சொல்ல முடியும். ஆனால் இத்தகைய விமர்சனங்களை வசைகளும், அவதூறுகளும் நிறைந்த மாயக்கம்பளத்தால் மறைத்துவிடுகிறார் ஜெயமோகன்.

அம்பேத்காரையும், பெரியாரையும், நேதாஜியையும், பகத்சிங்கையும் அவர்களது போராட்ட வரலாற்றையும் கணக்கிலெடுக்காமல் காந்தியைச் சுற்றி விமர்சனமற்று எழுப்புகிற எந்த பிம்பமும் அவதாரமாக்குகிற புனைவு முயற்சியே. ஜெயமோகன் செய்துவருவதும் இந்துத்துவத்திற்கு ஆதரவான அத்தகைய ஒரு புனைவு முயற்சி. 1990க்கு பிந்தைய பகுதி வரையில் இந்துத்துவம் காந்தியையும், அம்பேத்காரையும் எதிர்த்தது, மறைத்தது, மறுத்தது. 1990களின் இறுதியில் ஒடுக்கப்படுகிற மக்களை இந்துத்துவக் கருத்தியலில் இழுப்பதற்கான நுண்ணரசியல் யுக்தியாக இறுதியில் அம்பேத்காரையும், காந்தியையும் பயன்படுத்தி வருகிறார்கள். அதே நோக்கத்திற்காக இன்று இந்துத்துவ “பிரச்சாரக்களில்” சிலர் அம்பேத்கரை வசதியாக பெயர்த்தெடுத்து மேற்கோள் காட்டவும், தனக்கு பிடித்தவராக முன்னிறுத்தவும் செய்யத்துவங்கியுள்ளனர். ஜெயமோகனின் கட்டுரைகளில் இந்துத்துவத்திற்கு ஆதரவான நுட்பமான போக்குகள்

ஜெயமோகன் கட்டுரையில் //அவர் மீதான அவதூறுக்காகக் கோடானுகோடி பணம் அள்ளி இறைக்கப்படுகிறது.// என்கிறார். நானறிந்த வரையில் அயல்நாடுகளில் காந்தியை சர்வரோக நிவாரணியாக முன்னிறுத்துவதையும், நூலகங்களில் இந்தியா சம்பந்தப்பட்ட பகுதியில் காந்தியின் வாழ்க்கை நூல்களும் நிரம்பியிருக்கிறது. காந்தி குறித்த உரையாடல்கள் நடைபெறுகின்றன. காந்தியை நேசிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

//அவதூறுக்காகக் கோடானுகோடி பணம் அள்ளி இறைக்கப்படுகிறது.// என்று எந்த ஆதாரமுமில்லாமல் அவதூறை கிளப்புகிறார் ஜெயமோகன். ஜெயமோகனின் இத்தகைய அவதூறுகளும், இந்துத்துவ பிரச்சாரமும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன. போகிற போக்கில் "அயல்நாட்டு சதி" என்பது இந்துத்துவ பிரச்சார தந்திரம். இந்த தந்திரம் மக்களுக்கு அச்சத்தை ஊட்டவும், மற்ற நாடுகளின் மக்கள் குறித்த வெறுப்பை விதைக்கவும், தாங்கள் தாக்குதலுக்குளாவது போன்ற பிரமையில் இருக்கவும் பயன்படுகிற மோசமான வலதுசாரி அரசியல் ஆயுதம். பல கட்டுரைகளிலும் இந்துத்துவ அரசியல் பிரச்சாரத்திற்கு சார்பாக ஜெயமோகன் இந்த அவதூறு பிரச்சார ஆயுதத்தை நுட்பமாக இலக்கியம் என்ற பெயரில் பயன்படுத்துகிறார்.

இந்துத்துவ கனவின் எதிரியாக காந்தி இந்துத்துவக் கூட்டத்தால் கொல்லப்பட்ட 60 ஆண்டுகளுக்கு பிறகு அதே இந்துதுவக் கனவிற்கு காந்தி இன்று கதாநாயகனாக்கப்படுகிறார். இந்துத்துவத்தின் எதிரியாக அடையாளப்படுத்தப்பட்டு கொலைசெய்யப்படுவதும், மரணத்தின் நீண்ட காலத்திற்கு பிறகு கதாயாகனாக பலியாக்கப்படுவதும் காந்தியின் ஆளுமைக்குள் இருக்கிற இருவேறு கூறுகளின் மிகப்பெரிய முரண்.
//இன்றும் இந்த தேசத்தை ஒரு ஜனநாயக அமைப்பாக நிலைநிறுத்தும் சக்தி அவர் என்பதனால் எல்லா தேசவிரோதக் கூட்டத்துக்கும் அவர் எதிரியாகிறார்.// என்று காந்தியை விமர்சிப்பவர்களை "தேசவிரோத கூட்டமாக" சித்தரிக்கிறார் ஜெயமோகன். இந்த நிலப்பரப்பையும், இதில் வாழுகிற பல்வேறு தேசிய இன மக்கள் சமூகங்களையும், அவர்களது மொழி, பண்பாடு, கலாச்சாரம், அரசியல் உரிமைகளையும் ஆதரிக்கவும், பேணவும், வளர்க்கவும், பாதுகாக்கவும் துடிப்போடும், உண்மையான உள சுத்தியோடும் எந்த எதிர்பார்ப்புகளுமில்லாமல் அன்றாடம் உழைக்கிற, போராடுகிற பலர் காந்தியின் மீதான விமர்சனங்களை நேர்மையுடன் வைக்கிறார்கள். அத்தகைய விமர்சனங்களை வசைகளாலும், அவதூறுகளாலும் கடந்துவிட முடியாது. காந்தி பக்தியை பரப்புவது ஒருபுறமும் மக்களையும், நாட்டையும் அச்சுறுத்துகிற பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் கொள்ளைகளை, அரசியல், பொருளாதார பிரச்சனைகளை, இனப்படுகொலைகளை மொழியின் கோர்வைக்குள் மறைப்பது மறுபுறம். இதைத் தான் ஜெயமோகன் செய்துவருகிறார்.

/இன்றும் இந்த தேசத்தை ஒரு ஜனநாயக அமைப்பாக நிலைநிறுத்தும் சக்தி அவர்// என்கிறார் ஜெயமோகன். இந்தியா உண்மையிலேயே ஒரு சனநாயக அமைப்பாக செயல்படுகிறதா? காந்தி என்கிற பிம்பத்தை முன்னிறுத்துவதால் மக்களுக்கான சனநாயகத்தை உருவாக்க முடியுமா?

Sunday, August 12, 2012

டெசோ நாடகமும், வேதனைச் சுழலுக்குள் தமிழ் மக்களும்.

காலையில் டெசோ மாநாடு துவக்க உரையில் திரு.மு.கருணாநிதி ஆற்றிய உரையின் அடிப்படையில் சில குறிப்புகளை எழுதவேண்டிய அவசியம் வருகிறது.


படத்தில்: 2009 வன்னி இனப்படுகொலையின் போது தமிழ் மக்களின் இடப்பெயர்வு.
பல மாதங்களாக "டெசோ வருகிறது, தலைவர் அழைக்கிறார்" போன்ற விளம்பரங்களால் திமுகவின் மாநாடு அழைப்புகள் நிறைத்திருந்தது. வழக்கமாக நடத்தப்படுகிற கட்சி மாநாடுகளிலிருந்து இம்மாநாடு சற்று வேறுபட்டிருக்கிறது. அதன் பேசுபொருள் ஈழத்தமிழர்களைச் சுற்றிய திமுக அரசியல். இம்முறை சிறப்பு அழைப்பாளர்களாக அயல்நாட்டு முகங்கள், மேடையில் உணர்ச்சி கொப்பளிக்கும் பாடல்கள், கலைஞர் தொலைக்காட்சியின் சிறப்பு நேரடி ஒளிபரப்பு, சிறப்பு விளம்பரப் படத்தொகுப்பு. அனைத்தும் கருணாநிதியின் புகழ்பாடும் படியாக மிக இலாவகமாகப் பின்னப்பட்டிருக்கிறது. 2009ல் மாமன்னர் திரு.மு.கருணாநிதி ஆட்சியில் இருந்த போது இந்த மாநாட்டிற்குக் காட்டுகிற முயற்சியில் பாதியை தமிழக மக்களைத் திரட்ட காட்டியிருந்தால் இன்றைய நிலைமை ஏற்பட்டிருக்குமா? குறைந்தபட்சம் முத்துக்குமாரின் தன்னெழுச்சியான போராட்டத்திற்குப் பிறகு உறக்கத்திலிருந்து விழித்த தமிழர்களுக்குச் செய்திகளும், காட்சிகளும் சேராமல் தடுத்த படுபாதகச் செயலை செய்யாமலே தடுத்திருக்கலாமே! முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை உக்கிரமாக நடந்த இரத்தம் காய்வதற்குள் "செம்மொழி மாநாடு" என்ற பெயரில் மாமன்னர் குடும்பம் சகிதம் அரசு பணத்தில் பாராட்டு மழையில் நனைந்தார். "செம்மொழி மாநாடு" நடத்தவில்லையென்று "தமிழ்த்தாய்" சாகத் தவம் கிடந்தாரா? செம்மொழி மாநாட்டிற்குப் பதிலாக "ஈழம் இனப்படுகொலை எதிர்ப்பு மாநாடு" நடத்தியிருக்கலாமில்லையா? அழுவதற்கும், குமுறுவதற்கும், உலக அமைப்புகளுக்கு ஒற்றைக்குரலில் கோரிக்கை எழுப்பவும் வாய்ப்பு கிடைத்திருக்குமே. அன்றைக்கு ஆட்சி அதிகாரம் கையிலிருந்த போது "ஈழம்" என்ற சொல்லை விடுதலைச் சிறுத்தைகளின் விளம்பரத்தட்டிகளில் அகற்றி, தட்டிகளைக் கிழித்தது திமுக அரசின் காவல்த்துறை. இன்றைக்கு மேடையில் திமுக கண்ணீர் வடிப்பது எதற்காக? இழந்த சென்னைக் கோட்டை அதிகாரத்திற்காகவா அல்லது இருக்கிற டில்லி அதிகாரத்தைத் தக்க வைக்கவா?

இனப்படுகொலைக்கும், அரசியல் உரிமைகள் மறுப்பிற்கும் உள்ளான மக்களின் நீதிக்கான போராட்டத்தின் நியாயத்தை இடப்பங்கீடு கோரிக்கை அளவிற்கு மாற்றி உப்புசப்பில்லாத தீர்மானங்களை முன்மொழிகிறது டெசோ. படுகொலைக்கும், பல்வேறு வடிவங்களிலான இழப்பிற்கும் உள்ளான ஒரு மக்கள் சமூகத்தைத் தனது அரசியல் சுயநலத்திற்காவும், விளம்பரத்திற்காகவும் பயன்படுத்துகிற கயமைத்தனத்தைத் தொடராமல் இருப்பதே ஈழத்தமிழர்களுக்குக் கருணாநிதியும், திமுகவும் செய்கிற பெரும் உதவியாக இருக்கும்.

இன்றைய நிலையில் உலகமெங்குமிருந்து பங்கேற்பாளர்களை அழைத்து மாநாடுகளைக் கூட்டுவது பணம் இருக்கிற அமைப்புகளுக்கு மிக எளிதாக சாத்தியமாகிற விசயம் தான். இதிலொன்றும் அதிசய சாதனைகளில்லை. இத்தகையக் கார்ப்பரேட் மாநாடுகளின் பேசுபொருள்களும், முன்னிலைப்படுத்தப்படும் நபர்களும், பேசப்படுகிற விசயங்களும், தீர்மானங்களும் தான் அதன் அரசியலை தீர்மானிக்கின்றன. 
  • ஈழத்தில் இனப்படுகொலை நடைபெற்றது. 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் அதில் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் அரசியல் கைதிகளாகச் சிறைகளில் நீதி விசாரணை எதுவுமில்லாமல், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். காணாமல் போகவைத்தலும், ஆட்கடத்தலும், கொலைகளும், மிரட்டல்களும் தமிழ்மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படுகிறது. பாதுகாப்பும், நீதியும், நிவாரணமும் இல்லாத சூழலில் இழப்புகளுக்கு உள்ளான தமிழ் மக்களின் புலம்பெயர்வு அதிகமாகி வருறது.
  • ஈழத்தில் தமிழ்மக்களின் நிலங்களும், வளங்களும், கலாச்சாரமும் இலங்கை அரசின் ராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கியிருக்கிறது. கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
இந்தச் சூழலில், உண்மையிலேயே டெசோவிற்கு ஈழத்தமிழர்கள் மீது அக்கறையிருக்குமானால் குறைந்தபட்சமாகச் சில அடிப்படை தீர்மானங்களையாவது நிறைவேற்றி ஐ.நாவிற்கும், இந்திய அரசிற்கும் அழுத்தம் கொடுக்கிற செயல்களை தொடர்ந்து செய்யும்.
  1.  உடனடியாக ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பையும், உடனடி நிவாரணத்தையும், நிலங்கள், கலாச்சாரம், வாழ்வை, உரிமைகளை உறுதிப்படுத்திப் பாதுகாக்கிற பொறிமுறையை ஐ.நா நேரடி தலையீட்டில் உருவாக்க வேண்டும்.
  2. பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கான நிவாரணங்களையும், நீதியையும் வழங்க வேண்டும். சிறைகளில் வாடுகிற அரசியல் கைதிகள் குறித்த தகவல்களை வெளியிட்டு அவர்களுக்கு முறையான நீதியையும், நிவாரணத்தையும் வழங்கல். காணாமல் போகவைக்கப்பட்ட மக்கள் குறித்த உண்மைநிலையைக் கண்டறிந்து வெளியிடல் இவற்றை ஐ.நா பொறிமுறை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
  3. இனப்படுகொலையைச் சர்வதேச அளவில் விசாரித்து உண்மையை வெளிப்படுத்தவும், நீதி வழங்கவும் சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்க ஐ.நா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
  4. தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு என்பதை அங்கீகரித்து, தமிழர்களுக்கான அரசியல் தீர்வை அவர்களே தீர்மானிக்கிற சூழலை ஐ.நா உருவாக்க வேண்டும்.
இத்தகைய தீர்மானங்களையும், அரசியல் அழுத்தம் உருவாக்குகிற செயல்திட்டங்களையும் கார்ப்பரேட் விளம்பரக் கட்சியிடம் எதிர்பார்க்க முடியாது. மற்றக் காரணங்கள் பல இருப்பினும் புதுடில்லியின் வெளியுறவுத்துறையின் கொள்கையைத் திமுக அச்சுப்பிசகாமல் ஏற்றதன் விளைவாகவுமே இனப்படுகொலையின் உக்கிரம் நிறைவேறியது. வார்த்தைகளில் காட்சிப்படுத்த முடியாத துயரங்களில் வாடுகிற ஈழத்தமிழர்களின் நெஞ்சை மீண்டும் கிழிப்பது போன்றது அரசியல் அழுத்தமற்ற இத்தகைய வெற்று நாடகங்களை நடத்துவது. இந்த நாடகங்கள் குற்ற உணர்வைத் தமிழக மக்களின் மீது மீண்டும், மீண்டும் சுமத்துவதுடன், தமிழ் மக்களை வேதனைச் சுழலுக்குள் தள்ளுகிறது.

Friday, July 06, 2012

சாராய அரசும், கூட்டுக்கொள்ளையும்

"கடமை, கட்டுப்பாடு, கண்ணியத்துடன்" பொறுப்பாக எப்படி குடிப்பதென்று குடிகாரர்களுக்கு குடிக்க பயிற்சி வழங்குகிற பள்ளி/கல்லூரிகளை அரசு திறக்க முன்வர வேண்டும். தனியார் கல்வி முதலாளிகளையும் குடிகாரப் பள்ளிகளை துவங்க ஊக்கமளித்து அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் கொள்ளை லாபம் பார்க்கவும் செய்யலாம்.

இதனால் இரு கட்சிகளின் பிரபலங்களின் சாராய ஆலைகளுக்கும் பல ஆயிரம் கோடி வருமானம் பெருகவும் வாய்ப்பு உள்ளது. இதையே அரசின் பிரதான கடமையாக உணர்ந்து ஆளும் கட்சியும், திமுகவும் இதை செய்ய முன்வர வேண்டும். மற்ற கல்வி நிலையங்கள், சேவைகள், நூலகங்களை கொஞ்சம் கொஞ்சமாக மூடிவிடலாம். "குடிகாரநாடு" அல்லது "சாராய நாடு" என்று தமிழ்நாட்டின் பெயரை மாற்றலாம். "வாய்மையே வெல்லும்" பதிலாக "சாராயமே வெல்லும்" என்றும் மாற்ற அரசு முன்வர வேண்டும். அரசின் லட்சினையாக "சாராய குப்பியை" பயன்படுத்த வேண்டும். 


நூலகங்களையும், பள்ளிக்கூடங்களையும் மூடிவிட்டு மதுக்கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்கிற இந்த அரசுகள் மக்களை அறிவிலிகளாக வைத்திருப்பதிலும், போதை மயக்கத்திற்கு அடிமைகளாக மாற்றுவதிலும் கவனமாக இருக்கின்றன.

Saturday, June 23, 2012

நாம் தமிழர் கட்சிக் கொள்கை - மாற்றுக் கொள்கை அல்ல, இனவெறுப்பு கலந்த பாசிசம்


Anti-fascism exhibition 1998

'நாம் தமிழர் கட்சி' கோவையில் வெளியிட்ட ஆவணம் அது வெளியிடப்பட்ட நாளிலிருந்து கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. பெரியாரின் மீதான பொய்யுரைகளுக்காக மட்டுமே அது விமர்சிக்கப்படவில்லை. இனவெறியை அடிப்படையாகக் கொண்டு வெற்று முழக்கங்களை 'மாற்று' அரசியலாக முன்வைத்து சிறுபான்மை மொழி, மதங்களைச் சார்ந்தவர்களை எதிரியாக சித்தரிக்கிறது. அதன் இந்த பாசிச அரசியல் தமிழகத் தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகங்களுக்கும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அபாயம் நிறைந்தது என்கிற காரணத்திற்காகவே விமர்சனத்திற்கு உள்ளாகிறது.

திரு. சீமான் ஆனந்தவிகடன் நேர்காணலில் கொள்கை விளக்க ஆவணம் திருத்துதலுக்கும் மாறுதலுக்கும் உட்பட்டது என்பதை அதில் நாங்கள் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறோம். என்கிறார். எதிர்ப்பின் காரணமாக நாளையே நாம் தமிழர் கட்சி இந்த ஆவணத்தை திருத்தவோ, மாற்றவோ செய்யலாம். ஆனால் வரலாற்றுத் திரித்தல்கள், தகவல் திரித்தல்கள் மற்றும் முரண்பாடுகளுடன் பாசிச, இனவெறுப்பை கொள்கையாக வகுத்து 'மாற்று அரசியலாக' அறிமுகம் செய்ததற்கு என்ன பதிலை வைத்திருக்கிறார் திரு. சீமான்?

பெரியாரை விமர்சிக்கக் கூடாதா என்கிற கேள்வியையும் அவர் எழுப்பியிருக்கிறார். பெரியாரையும் அவரது போராட்டங்களையும் யாரும் விமர்சிக்கலாம். ஆனால் அத்தகைய விமர்சனங்கள் சரியான தகவல்களோடும், நேர்மையுடனும் இருப்பதே 'மாற்றை' முன்வைக்கிற அரசியல் கட்சிக்கும், அதன் தலைமைக்கும் பெருமை சேர்ப்பதாகும். சீமானுக்கு முன்னர் பார்ப்பனீய சிந்தனையாளர்களும், 1994ல் பெங்களூர் குணாவின் பிரச்சார நூலும், தொடர்ந்து இந்துத்துவ இணையதளப் பிரச்சாரகர்களும் பலமுறை தமிழர்களுக்கும், தமிழ்மொழிக்கும் எதிரானவராக பெரியாரை சித்தரித்திருக்கிறார்கள். பெரியாரை அவர் பேசிய, எழுதிய, நிலைப்பாடுகள் எடுத்த போராட்டச் சூழல்களிலிருந்து கருத்துக்களைப் பிரித்தெடுத்தும், பிழையாக தகவல்களைத் திரித்தும் பரப்பிய அவதூறு நோக்கிலான அத்தகைய விமர்சனங்களை பலரும் ஆதாரங்களுடன் மறுத்திருக்கிறார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சி உருவாகும் வரையில் பெரியார் தி.க. அமைத்துக் கொடுத்த மேடைகள் தோறும் 'நான் பெரியாரின் பேரன்...' என்று அறிவித்துக் கொண்ட திரு. சீமான், அந்த மேடைகள் ஒன்றில்கூட பெரியாரை விமர்சிக்கவுமில்லை; பிரதான எதிரியாக சித்தரிக்கவுமில்லை. ஆவண வெளியீட்டிற்குப் பின்னர் பெரியார் தி.க. கண்டிக்கத் துவங்கியவுடன் பதிலளிப்பதற்கு முடியாமல் "அண்ணன்களுக்கு கண்டிக்க உரிமையுண்டு" என்ற பெயரில் பதுங்குகிறார்.

இன்றைய நிலையில் தமிழ் மக்களுக்கு  கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் சனநாயகமற்ற, நாடகீய அரசியலிலிருந்து விடுதலையும் மாற்று அரசியலின் தேவையும் உள்ளதை எவரும் மறுக்க முடியாது. அதனடிப்படையில் இந்திய அதிகார மையத்திடமிருந்து தமிழகத்தின் உரிமைகளையும், மாநிலத்தின் அரசியல் அதிகாரத்தையும் எடுத்துக் கொள்ள வலுவான மாநில அரசும், தலைமைகளும் தேவை. ஆனால் அத்தகைய அரசு பொய்யான பிரச்சாரங்களின் மூலமும், இனவெறியின் மூலம் நிறுவப்படும்போது அது பாசிசக் குணமுடையதாகவே இருக்கும். மற்ற கட்சிகளின் அரசியல் கொள்கைகளையும், செயல்பாட்டு நடைமுறைகளையும் விமர்சித்து, அதற்கு மாற்றாக முற்போக்கான, சனநாயக அடிப்படையிலான ஆக்கப்பூர்வமான கொள்கையையும், திட்டங்களையும் வகுத்திருக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி முன்வைத்துள்ள கொள்கைகள் இந்திய அரசாலும் அதன் அதிகார வர்க்கத்தாலும் ஏமாற்றத்திற்குள்ளாகிற தமிழக மக்களின் உரிமைகளையும், அரசியலதிகாரத்தையும் முழுமையாக அடையவும், ஈழத்தமிழர்களின் உரிமைக்கான கொள்கை மாற்றங்களை உருவாக்கவும் உதவாது.

'தமிழ் உலகின் முதல் மொழி. தமிழர் உலகின் முதல் மக்கள்' என்பதும் 'தமிழ்', 'தமிழர்' தொன்மை, சிந்துசமவெளி நாகரீகம் உட்பட நாம் தமிழர் கட்சி ஆவணம் கட்டியமைக்கிற கதைகளும் வரலாற்று அடிப்படையிலோ, அறிவியல் அடிப்படையிலோ நிரூபிக்கப்படாத பழம்பெருமையைப் பேசுகிறது. அதனடிப்படையில் தமிழ்நாட்டின் முரண்பாடுகளை அடையாளப்படுத்தி, வரிசைப்படுத்தி நாம் தமிழர் கட்சியின் அரசியலை வகுத்திருக்கிறது. நிகழ்கால அரசியலையும், எதிர்கால அரசியலையும் மாற்றியமைக்க பழங்கால ஆதி மனிதனையும், மனித சமூகத்தையும் தமிழ், தமிழர் என்ற அடையாளத்திற்குள் அடைத்து, அதனடிப்படையில் கொள்கைகளை வகுப்பதிலிருந்தே அதன் பாசிசமும், இனவெறுப்பும் துவங்குகிறது.  

சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்கள் மீதான பாசிசம்
நாம் தமிழர் கட்சியின் ஆவணத்தில் அசீவகம், உலகாய்தம், வள்ளுவம், வள்ளலாரியம் ஆகியவற்றை இணைத்து 'தமிழியம்' என்று தமிழர்களின் நெறியாக குறிப்பிடுகிறது. அதில் 3 வது முரண்பாடாக,
தமிழியத்திற்கும் முகமதியத்திற்கும், தமிழியத்திற்கும் கிறித்துவத்திற்கும் இடையே முரண்பாடு (நாம் தமிழர் கட்சி ஆவணம், பக்கம் 37) 
அடையாளப்படுத்துகிறது. மேற்கொண்டு அதன் விளக்கமான பகுதியில்,

3ம் முரண்பாடுகளான முகமதியமும், கிறித்தவமும் தமிழ்த்தேசியத்தை ஒவ்வொரு காலத்தில் ஆளுமை செலுத்தியவை; சட்டப் பாதுகாப்பும், சொத்துடமை வலுவும், பன்னாட்டுப் பின்புலமும் கொண்டு, மதவழித் தனி இனக்கட்டுமானம் கொண்டவை; முகமதியத் தமிழரும், கிறித்தவத் தமிழரும் தங்களுடைய முதன்மை அடையாளம் தமிழ்தேசிய அடையாளமே என்று உணர்ந்து வருவாராயின், நட்பு முரண் வகையிலும், அல்வழிப் பகைமுரண் வகையிலும் இடம்பெறுவர்; இவர்கள் எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும் கையாளப்பட வேண்டிய தரப்பினர். (நாம் தமிழர் கட்சி ஆவணம்: பக்கம் 39)
ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார அமைப்புகளின் கொள்கை ஆவணத்தைப் படிப்பது போன்ற பதட்டத்தை இது உருவாக்குகிறது. பார்ப்பனீய இந்துத்துவ அரசியலும், நாம் தமிழர் கட்சியின் கொள்கையும் இணையும் புள்ளியும் இது. சாவர்க்கர், கோல்வால்கரின் இந்துத்துவ கோட்பாட்டிலிருந்து சற்றும் பிசகாமல் பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழுகிற இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் எதிரிகளாக சித்தரிக்கிறது. இங்குள்ள மக்கள் சாதி ஒடுக்குமுறை மற்றும் தனிப்பட்ட விருப்பின் காரணமாக தனது மதத்தை தேர்வு செய்த உரிமையை எதிர் நிறுத்துகிறது. அவர்களை "எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும் கையாளப்பட வேண்டிய தரப்பினர்" என்று சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்கள் மீதான கண்காணிப்பையும், சந்தேகத்தையும் தமிழக மக்களிடையே விதைத்து, பிளவை உருவாக்க முனைகிறது.

முகமதிய மன்னர்கள் ஆட்சியையும், பிரித்தானிய காலனியாதிக்கத்தையும் "முகமதியமும், கிறித்தவமும் தமிழ்த்தேசியத்தை ஒவ்வொரு காலத்தில் ஆளுமை செலுத்தியவை" என்பதன் வழியாக இஸ்லாமிய, கிறித்தவ மக்களின் மீது பழி சுமத்துகிறது. "சட்டப் பாதுகாப்பும், சொத்துடைமை வலுவும், பன்னாட்டுப் பின்புலமும் கொண்டு, மதவழித் தனி இனக்கட்டுமானம் கொண்டவை" என்பதன் மூலம் இஸ்லாமியர்களையும், கிறித்தவர்களையும் அன்னியப்படுத்துகிறது. "முகமதியத் தமிழரும், கிறித்தவத் தமிழரும் தங்களுடைய முதன்மை அடையாளம் தமிழ்தேசிய அடையாளமே என்று உணர்ந்து வருவாராயின்" என்கிற பாசிச, இனவெறி நிபந்தனையை முன்வைக்கிறது.

சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்களுக்கான தனிச் சட்டப் பாதுகாப்புகளை பறித்து பொதுசிவில் சட்டம் கொண்டு வரவேண்டுமென்று இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அந்த மத நிறுவனங்களின் சொத்துக்கள் மற்றும் அயல்நாட்டு தொடர்புகளை எதிரியாகவே அவை சித்தரிக்கின்றன. இந்துத்துவா என்பது கலாச்சாரமென்றும், அத்தகைய 'கலாச்சார தேசியத்தை' பிறமதங்களின் மக்கள் ஏற்றுக்கொள்ளவும் அத்வானியும், இந்துத்துவவாதிகளும் வலியுறுத்தியதும் கவனிக்கத்தக்கது. அதே வகையில் நாம் தமிழர் கட்சி 'தமிழியத்தை' முன்வைக்கிறது. இவை ஒரு மதசார்ப்பற்ற, சனநாயக அரசிற்கு உகந்த கூறுகளல்ல.

இந்துத்துவ அரசியல் அதன் பழம்பெருமை, பழங்கதைகளை பெருமிதமான அடித்தளமாக வைத்து, நில எல்லையை முன்வைத்து, மற்ற மொழி, மதங்களைச் சார்ந்த மக்களை எதிரிகளாக சித்தரித்து அதன் அரசியல் கொள்கையை வகுத்திருக்கிறது. தேர்தல்களுக்கு ஏற்ப அவற்றிலிருந்து தந்திரமாக பிரச்சாரங்களையும், முழக்கங்களையும் தேர்ந்தெடுத்து முன்வைக்கிறது. இந்துத்துவ அரசியலின் நாயகர்களில் மன்னர்களுக்கு முக்கிய இடமளித்திருக்கிறது. மராட்டிய மன்னன் சிவாஜி இந்துத்துவ அரசியலுக்கு அடையாளமாக்கப்பட்டிருக்கிறார்.

அதேவகையில், நாம் தமிழர் கட்சியும் பழங்கால கதைகள், மன்னர்கால பழம்பெருமையை அடித்தளமாக வைத்து எல்லைகளை விரித்துக் கட்டி எழுப்புகிறது. அதன் நாயகர்களில் சோழமன்னர்களும், பிரதானமாக '25 பெருமைமிகு நாடுகளை வென்று ஆண்ட அருண்மொழித் தேவனாம் இராசராசன்' இடம்பெறுகிறார். நிகழ்கால அரசியலில் அதிகாரம் செலுத்துகிற ஆட்சியாளர்களும் சனநாயகத்தை கட்டுப்படுத்துகிற மாமன்னர்களாக இருக்கையில், நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தேசிய மன்னர்காலப் பெருமிதம் எத்தகைய மாற்றத்திற்கு உதவப்போகிறது? மும்பையில் சிவசேனா கட்சியினருக்கு ஆதரவாக மும்பை வாழ் தமிழ்மக்களிடம் திரு. சீமான் தேர்தல் பிரச்சாரம் செய்ததையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. பெரியார் மீதான அதன் விமர்சனங்களும் இந்த நேர்கோட்டில் தான் அமைந்துள்ளது. இந்துத்துவாவிற்கு தமிழகத்தில் அரசியல் களத்தை விரிவாக்குகிறது நாம் தமிழர் கட்சியின் கொள்கை. 

சாதீய ஒடுக்குமுறை, ஒதுக்குதல், தீண்டாமை, அடக்குமுறைகள் குறித்து...
"நாம் ஒரு தேசமாக இருப்பதாக நம்பினால், நாம் மிகப்பெரியதொரு மாயையில் இருப்பதாகப் பொருள். பல்லாயிரம் ஜாதிகளாகப் பிரிந்திருக்கும் மக்கள் எப்படி ஒரு தேசமாக முடியும்? நாம் சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு தேசமாக இல்லை என்பதை எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. அமெரிக்காவில் ஜாதிப் பிரச்சனை இல்லை. இந்தியாவில் ஜாதிகள் இருக்கின்றன.

ஜாதிகள் தேசியத்திற்கு எதிரானவை. முதலில் அவை சமூக வாழ்க்கையில் பிளவை ஏற்படுத்துகின்றன; அவை தேசியத்திற்கு எதிரானவை ஏனெனில், அவை ஜாதிகளுக்கிடையே பொறாமையையும், பகைமையையும் உருவாக்குகின்றன. ஆனால், நாம் உண்மையில் ஒரு தேசமாக விரும்பினால், இவை அனைத்தையும் வென்றாக வேண்டும்." - டாக்டர் அம்பேத்கர்
அம்பேத்கரின் இக்கருத்தை தமிழ்த்தேசிய அரசியலுக்கு பொருத்திப் பார்ப்பது ஆக்கப்பூர்வமான, சனநாயக முறையிலான மாற்று அரசியலை கட்டியெழுப்ப அவசியமாகிறது. தமிழகத்தில் ஆழமாக பிறப்பு முதல் இறப்பிற்குப் பின்னர் வரையில் நடைமுறையில் இருக்கிற சாதீய அடக்குமுறை, ஒடுக்குமுறை மற்றும் ஒதுக்குதலை முதன்மையான முரண்பாடாக நாம் தமிழர் கட்சி அணுகவில்லை. சாதியப் படிநிலையில் கீழ் படி முதல் மேல் படி வரை படிப்படியாக உயர்கிற அதிகாரமும், வெறுப்பும் கலந்த அடக்குமுறையை வாழ்வியலாகக் கொண்டிருக்கிற மக்களை அவற்றிலிருந்து விடுவிக்க சாதியொழிப்புத் திட்டம் எதையும் முன்வைக்காமல் "தமிழராக நாம் ஒன்றிணைவோம்" என்கிறது நாம் தமிழர் கட்சி. துல்லியமான திட்டங்ளை முன்வைக்காமல் 'தமிழர்' என்கிற முழக்கத்தை மட்டும் முன்னெடுப்பது ஒடுக்கப்படுகிற மக்களுக்கு எந்த மாற்றத்தையும் உருவாக்காது. நாம் தமிழர் கட்சி சாதிய முரண்பாட்டை மிக எளிமைப்படுத்தி கடந்துசெல்வது, அதன் ஆதிக்கசாதி அரசியல்தன்மையை அப்பட்டமாக்குகிறது. இன்றைக்கு அரசியல் அதிகாரத்தை அனுபவிக்கிற ஆதிக்கசாதிகளின் அரசியலுக்கு எவ்வகையிலும் அது மாற்றாகவோ, மாறுபட்டதாகவோ இல்லை. 

சிறுபான்மை மொழியினர் மீதான பாசிசம்
'இன்னார் தெலுங்கு பேசுகிற சாதியைச் சார்ந்தவர்', 'இன்னார் கன்னடம் பேசுகிற சாதியைச் சார்ந்தவர்' என்று சாதி வழியாக பல தலைமுறைகளுக்குப் பின்னால் சென்று மொழிப் பின்புலத்தை அடையாளப்படுத்தி ஒருவரைத் தாக்குவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அடிப்படையில் இது பாசிச குணமுடையது. தமிழகத்தில் தலைமைகளின் கொள்கை மற்றும் செயல்பாட்டை விமர்சிப்பதற்குப் பதிலாக இந்த அசிங்கமான, அருவருப்பான சாதிவெறி, இனவெறி மற்று மொழிவெறிப் பாசிசத்தையே நாம் தமிழர் கட்சி அதன் பிரச்சாரங்களில் முன்னெடுக்கிறது. 

குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள் பெரும்பான்மை மொழி வழி வந்தவர்களை மட்டுமே மையப்படுத்தி உருவாக்குகிற எந்த அரசியல் கொள்கையும், தேசியமும் ஆபத்தான பாசிச இனவெறுப்பை அரசியல் பாதையாக்குகிறது. சிறுபான்மை மொழி பேசுகிறவர்களிடம் அவர்களது மொழியை விட்டும் பெரும்பான்மையினரின் மொழியை "தாய்மொழியாகவும், வாழ்வியல் மொழியாவும்" ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவதும், வற்புறுத்துவதும் சனநாயகத்துக்கு எதிரானது மட்டுமல்ல; உரிமைகளை மறுக்கிற பாசிச அரசியலாகும். ஈழத் தமிழர்கள் மீது அவர்களது தாய்மொழி அல்லாத சிங்கள மொழியைத் திணித்தது சிங்கள இனவெறி அரசு. அத்தகைய அரசியலையே நாம் தமிழர் கட்சி முன்வைக்கிறது.
"பிற மொழியாளர்கள், பிறமொழியாளர்களாகவே தொடர்ந்து வாழ்வதும் அல்லது அந்த பிறமொழிகளுக்கும் தாய்மொழி தமிழே என்று உணர்ந்தறிந்து, தமிழை வாழ்வியல் மொழியாகவும், அடுத்து, வழிவழியாகத் தாய்மொழியாகவும் ஏற்றுத் தமிழராக வாழ்வதும் அவர்களுக்குள்ள உரிமை." (பார்க்க: பக்கம் 33, நாம் தமிழர் கட்சி ஆவணம்)
மொழி ஆதிக்க பாசிசத்தை இதைவிட மென்மையாக வேறுவழியில் திணிக்க முடியாது. தமிழை தாய்மொழியாகக் கொண்டும், வாழ்வியல் மொழியாகக் கொண்டும், பிறமொழியை கற்று அயல்நாடுகளில் வாழுகிற தமிழர்களுக்கு அந்த நாடுகளில் இதே வகை பாசிசத்தைப் பொருத்தினால் எப்படியிருக்கும்? அவர்கள் தமிழ் மொழியைக் கற்கும் உரிமையை இழக்க மாட்டார்களா? புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ் எழுத, பேச முடியாத தலைமுறையாக உருவாவதற்கு வழிவகுக்காதா? ஆவணத்தில் மொழி குறித்த நிலைபாடுகளில் இன்னும் பல இடங்களில் நாம் தமிழரின் மொழி ஆதிக்க பாசிசம் வெளிப்படுகிறது.

"அவரவர் நாட்டில் அவரவர்க்கு உரிமை தமிழர் நாட்டில் தமிழர்க்கு உரிமை" என்கிறது மற்றொரு முழக்கம். மராத்திய மண்ணிலிருந்து வேற்று மொழிக்காரர்களை வெளியேற்றும் வகையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் பால் தாக்கரேவின் அரசியல்லுக்கு சற்றும் குறைந்ததல்ல இந்த முழக்கம். இந்த முழக்கத்தை பிறமாநிலங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் பல தலைமுறைகளாக வாழுகிற தமிழர்களுக்குப் பொருத்திப் பார்க்க அச்சமாக இருக்கிறது. அவர்களது அரசியல் உரிமையையும், மொழியுரிமையையும் பறிக்கிற இந்த பாசிசப் போக்கு கண்டிக்கத்தக்கது. இத்தகைய அரசியல், தமிழர்களின் விடுதலைக்கும், உரிமைப் போராட்டங்களுக்கும் எதிரானது. 

ஈழ அடையாளங்களைப் பயன்படுத்தலும், இப்பாசிசக் கொள்கையின் எதிர்விளைவுகளும்...
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமிழீழத்தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரனின் இடம் சமன்செய்ய முடியாதது. தமிழகத்தின் அரசியலும், சூழலும் ஈழத்தின் சூழலிலிருந்து வேறுபட்டது. ஆனால் திரு. வே. பிரபாகரனையும், ஈழத்தை தொடர்புபடுத்துகிற முழக்கங்களையும் அரசியல் கொள்கை ஆவணத்தில் வைத்திருப்பதன் ரகசியம் ஈழத்தமிழர்களின் ஆதரவை கவர்கிற திட்டம் தானே? இத்தகைய ஒரு பாசிச கொள்கையை முன்வைப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கும், நீதிக்குமான போராட்டங்களுக்கு அது எதிர்விளைவுகளை உருவாக்குவதை ஈழத்தமிழர்களும் கவனத்தில் எடுப்பது அவசியம்.

வன்னி இனப்படுகொலைக்குப் பிந்தைய தமிழக அரசியல் முன்னெப்போதைக் காட்டிலும் ஈழ விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி இனப்படுகொலை உக்கிரத்தின் விளைவாகப் பிறந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழக அரசியலையும், ஈழத்து விடுதலைப் போராட்டத்தையும் வேறுபடுத்த முடியாத அளவு அக்கட்சி குழப்பமாக பிணைத்துள்ளது. இதனடிப்படையில் ஈழத்தமிழர்களில் பலரும் பல நாடுகளில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவையும், உதவிகளையும் செய்துவருகிறார்கள். நாம் தமிழர் கட்சி முன்வைக்கிற அரசியல் மற்றும் கொள்கைகளின்  விளைவுகள் நன்மையோ, தீமையோ அவை ஈழத்தமிழர்களையும் பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

கட்சி ஆவணத்தில் மிகக் கணிசமான பக்கங்களை திரு. வே. பிரபாகரனுக்கும், ஈழத்தமிழர் குறித்தும் ஒதுக்கியிருப்பது ஈழத்தமிழர்கள் மற்றும் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் ஈர்ப்பை உருவாக்கலாம். நாம் தமிழர் கட்சி புலிகளின் கொடியினை அடியொற்றிய கொடி. தமிழீழத்தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் மற்றும் ஈழத்தை முன்னிறுத்திய பிரச்சாரம் இவற்றை பயன்படுத்துகிற போது, அதன் கொள்கையின் விளைவுகள் ஈழத்தமிழர்களையும் பாதிக்குமென்பதை கருத்திலெடுக்க வேண்டும்.

வன்னி இனப்படுகொலையில் 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது தமிழக அதிகாரம் கைகட்டி வேடிக்கை பார்த்த ஏமாற்றத்தை, வேதனைகளை நெஞ்சில் தாங்கியும், இனப்படுகொலையின் உளவியல் தாக்குதலையும், நிர்மூலமாக்கப்பட்டுள்ள தமிழர் விடுதலைப் போராட்ட வலிகளிலும் வாழுகிற மக்கள் நிகழ்கால, எதிர்கால அரசியலை தேர்ந்தெடுப்பதிலும், கட்டமைப்பதிலும் கவனத்தோடும், எச்சரிக்கையோடும் இருப்பது அவசியமாகிறது. அரசியல் இலக்குகளை அடைவதற்கு கொள்கைகளும், திட்டங்களும் இன்றியமையாதவை என்கிற அடிப்படையில் தமிழ்த்தேசிய அரசியலுக்காக முன்வைக்கப்படுகிற கொள்கைகள் விமர்சனத்திற்குள்ளாக வேண்டும். அத்தகைய விமர்சனங்களை புறந்தள்ளுகிற எந்த முயற்சியும் ஆட்சியைக் கைப்பற்றி பதவிகளைப் பெற உதவலாம். சமூகத்தையும், அரசியல் அதிகாரத்தின் தற்போதைய நிலைமையையும் மாற்றுகிற அரசியல் இலக்குகளை அடைவதற்கு எவ்வகையிலும் உதவாது. 

அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் கொள்கை மாற்றுக் கொள்கை அல்ல. மற்றுமொரு அரசியல் கட்சியின் பிரகடனம். அது பாசிச, இனவெறியை அரசியலாக வைக்கிறது. சனநாயமுறையில், ஆக்கப்பூர்வமான மாற்று அரசியலில் அக்கறையுடைய‌வர்கள் அதை விமர்சிப்பதும், எதிர்ப்பதும் காலத்தின் கட்டாயம்.

யோ.திருவள்ளுவர், 
12.06.2012
சித்திரம்: behance