Friday, August 31, 2012

கூடங்குளம்: சந்தைப் பொருளாதாரக் காலத்தின் நீதிமன்ற அணுகுமுறை

கூடங்குளம் அணு உலைக்கு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் முந்தைய அனுமதியில் 45°C வெப்பம் கழிவுநீர் கடலில் கலக்க அனுமதித்திருந்தது. அதனை 36°C ஆக மாற்ற நீதிமன்றமே ஆலோசனை வழங்கியிருக்கிறது. மாசுகட்டுப்பாடு வாரியம் உத்தரவை மாற்ற ஒப்புக்கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் அந்த வழக்கு ரத்துச் செய்யப்பட்டிருக்கிறது.

மக்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரச்சனைகளும் நிறைந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் நீதிமன்

றத்தின் போக்கு விசித்திரமாக இருக்கிறது. எந்த ஆய்வின் அடிப்படையில் முன்னர் 45°C வெப்பநீர் கழிவை கடலில் கலக்க மாசுகட்டுப்பாடு வாரியம் அனுமதித்தது? வாரியத்தின் அனுமதிக்கு அரசின் அழுத்தங்கள் இருந்தனவா ஆகிய கோணங்கள் கணக்கிலெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

கார்ப்பரேட்களும், அரசும் சம்பந்தப்படுகிற பிரச்சனைகளில் நிலம், கனிம மற்றும் இதர வளங்கள், வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற மக்கள் ஒரு தரப்பாக எதிர்ந்து நின்று போராடுகிற (நர்மதை ஆற்றின் குறுக்கே அணைகளைக் கட்ட பழங்குடி மக்களின் இருப்பிடம், வாழ்வாதாரம் அழித்த பிரச்சனை முதல் கூடங்குளம் வரை) பல வழக்குகளில் சந்தைப் பொருளாதாரக் காலத்தின் நீதிமன்ற அணுகுமுறை கவலை தருவதாக இருக்கிறது.

உங்கள் கருத்து என்ன?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com