Wednesday, August 30, 2006

அய்யப்பனுக்கு மீண்டும் தீட்டு!!

இணையத்தில் நான் படித்த கட்டுரை ஒன்று. இந்த கட்டுரையின் ஆசிரியர் திருமகள் அவர்களுக்கும் தமிழ்நாதம்.காம் இணையதளத்திற்கும் மிக்க நன்றி! http://www.tamilnaatham.com/articles/2006/aug/thirumahal/30.htm

அய்யப்பனுக்கு மீண்டும் தீட்டு தலைமைப் பூசாரி பாலுறவு வழக்கில் கைதாகிறார்! (பாகம் - 2)-திருமகள் (கனடா)-

மரம் சும்மா இருக்க விரும்பினாலும் காற்று அதனை விடுவதில்லை. நான் அய்யப்ப சாமியைப் பற்றிக் கவலைப் படாவிட்டாலும் அவரது பக்தர்கள், பூசாரிகள், சோதிடர்கள் என்னை விடுவதாக இல்லை.

முன்னர் நான் எழுதிய 'அய்யப்பனுக்குத் தீட்டு! பயங்கர கோபத்தில் இருக்கிறார்!" என்ற கட்டுரையைப் படித்து விட்டுப் பலர் போற்றி எழுதியிருந்தார்கள். மதத்தின் பெயரால் பக்தி வணிகம் செய்யும் பாதகர்களின் வண்டவாளங்களைத் தோலுரித்துக் காட்டுமாறு கேட்டுக் கொண்டார்கள். போற்றுதல் இருந்தால் து}ற்றலும் இருக்கத்தானே செய்யும். சிலர் து}ற்றி எழுதியிருந்தார்கள். நான் மத நம்பிக்கையையும் கடவுள் நம்பிக்கையையும் சிதைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

உண்மையில் எனது கட்டுரையில் வந்த சங்கதிகள் என்னுடைய சொந்தச் சரக்கல்ல. எல்லாம் புதின ஏடுகளில் வந்த செய்திகளே. ஏன் அதன் தலைப்புக்கூட செய்தி ஏடுகளில் வந்ததுதான்.

அய்யப்ப பக்தர்களுக்கு இப்போது பொல்லாத காலம். அவர்களுக்குச் சோதனைக்கு மேல் சோதனை வந்த வண்ணம் உள்ளது.

'அய்யப்பனுக்குத் தீட்டு பயங்கர கோபத்தில் இருக்கிறார்!" என்பதைப் படித்துவிட்டு பதை பதைத்த பக்தர்கள் இப்போது வந்துள்ள செய்தியைப் படித்து விட்டு என்ன செய்யப் போகிறார்களோ நானொன்றும் அறியேன் பராபரமே!

இன்றைய தமிழக முதல்வர் சரியாக 54 ஆண்டுகளுக்கு முன்னர் திரைக்கதை உரையாடல் எழுதி வெளிவந்த பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வாயிலாக கோயில் பூசாரிகளை ஒருபிடி பிடித்தார். அந்த அனல் தெறிக்கும் உரையாடல் அப்போது மிகவும் புகழ் அடைந்தது.

'கோயிலில் குழப்பம் விளைவித்தேன் கோயில் கூடாதது என்பதற்காக அல்ல. கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன் அவன் கடவுள் பக்தன் என்பதற்காக அல்ல. கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு காமுகனாக இருந்தான் என்பதற்காக...." என்பதுதான் அந்த வசனம்.

பராசக்தி திரைப்படத்துக்கு முன்னர் அண்ணா கதை வசனம் எழுதி வெளிவந்த வேலைக்காரி திரையுலகில் ஒரு திருப்புமுனை ஆக அமைந்தது. நு}று நாளுக்கு மேல் ஓடி சக்கை போட்டது. அண்ணாவின் உரையாடல் 'உறையில் இருந்து எடுத்த வாள் பளிச் பளிச் என்று மின்னுவதாக" மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதியிருந்தார்.

'பகலிலே இளித்தவாயர்களுக்கு உபதேசம் இரவிலே இன்பவல்லிகளுடன் சல்லாபம்" என்ற உரையாடல் அதில் வரும். அந்த உரையாடலை நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி பேசுவார்.

அரை நு}ற்றாண்டு சென்ற பின்னரும் நிலைமை மாறவில்லை.

சபரிமலை தந்திரி அதாவது சபரிமலை தலைமைப் பூசாரி கண்டாரு மோகனரு கைதாகிறார்! அய்யப்பன் சாமிக்கும் அய்யப்பன் பக்தர்களுக்கும் இடையில் தரகராக நின்று கொண்டு அய்யப்பனோடு பேசும் பூசாரிதான் கைதாகிறார். இதை நீங்கள் படிக்கும்போது கைதாகி இருப்பார்!

சோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் தந்பூதிரிகள் ஆகம விதிப்படி நாளும் குளித்துவிட்டுத்தான் பூசை செய்ய வேண்டும். ஆனால் இப்போது சபரிமலை கோயிலில் உள்ள தந்திரியும் மேல் சாந்தியும் குளி;ப்பதில்லை. குளிக்காமல்தான் பூசை செய்கிறார்கள். ஆசார நியமனம் பார்ப்பதில்லை. மகாருத்ர யாகம், சகஸ்ரகலசம் ஆகியவையும் முறையாக நடப்பதில்லை. இதனால் சபரிமலையின் புனிதம் கெட்டுவிட்டது. அய்யப்பன் பயங்கர கோபத்தில் இருக்கிறார் என்ற வீசிய குற்றச்சாட்டுக்களை வைத்து அவர் கைது செய்யப்படுகிறார் என்று நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால் அதுவல்ல காரணம். குளிக்காதது கிரிமினல் குற்றமல்ல!

ஓகோ! எல்லாப் புரோகிதர்களும் செய்வது போல அய்யப்பன் போட்டிருக்கம் பல கோடி பெறுமதியான நகைகளில் சிலவற்றை தனது மகள் அல்லது மகன் திருமணத்துக்குத் திருடி இருப்பார். அதுதான் காவல்துறை அவரைக் கைது செய்கிறது என்கிறீர்களா?

அதுவும் இல்லை. அப்படி அய்யப்பன் கிலோக் கணக்கில் போட்டிருக்கும் தங்கம், வைரம் வைடூரியம் ஆகியவற்றால் செய்த நகைகளைத் திருடுவது பெரிய குற்றமல்ல! எல்லாப் பூசகர்களும் பூசாரிகளும் அதை அவ்வப்போது செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். சில சமயம் சாமி சிலைகளையே திருடி விடுகிறார்கள்!

கொலை, களவு, பொய், கள், காமம் என்ற பஞ்சமா பாதகங்களில் அய்யப்பன் கோயில் பூசாரியார் கடைசிப் பாதகமான காமத்திற்காகக் கைது செய்யப்படுகிறார்! அய்யப்பனுக்குக் களங்கம் ஏற்படுத்திய தந்திரியை சிறையில் தள்ளுங்கள் என தேவசம் சபை அமைச்சர் ஆவேசமாகப் பேசியுள்ளார். தந்திரியின் வேலையையும் தேவசம் சபை பறித்து விட்டது.

வரைவின் மகளிர் வீட்டை காமகோட்டமாக்கி தாகசாந்தி செய்யப்போன சபரிமலை அய்யப்பன் கோயில் தந்திரிதான் வளமாக சில இளைஞர்களிடம் மாட்டிக் கொண்டார்.

தந்திரி மாறு வேடத்தில் போகவில்லை. நெற்றியில் பட்டை, நடுவில் பெரிய குங்குமப் பொட்டு, கழுத்தில் இரத்தினமாலை, கையில் தங்கக் காப்புக்கள், விரலில் இரத்தின மோதிரங்கள் இடுப்பில் பட்டு வேட்டி இத்தியாதி இலட்சணங்களோடு அம்பாள் தரிசனத்துக்குப் போயிருக்கிறார். இவை போதாதா அவரை யார் என்று அடையாளம் காண? அவரது படம்தானே நாளும் பொழுதும் செய்தித்தாள்கிளில் வெளிவந்து கொண்டிருக்கிறது. படத்தை வைத்துக் கொண்டுதான் இளைஞர்கள் அவரை எளிதாக அடையாளம் கண்டு சுற்றி வளைத்திருக்க்pறார்கள்.

ஆடையில்லாத அழகிகளோடு பூசாரி கலவிக் கடலில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த போது இளைஞர்கள் அந்தக் காட்சியை படப்பெட்டிக்குள் பிடித்துக் கொண்டார்கள்!

ஒரு கோடி உரூபா தருவதாக தந்திரி தந்திரமாக பேரம் பேசிப் பார்த்தார். முடியவில்லை. கழுத்தில் போட்டிருந்த இரத்தினமாலை, கைகளில் கட்டியிருந்த தங்கக் காப்புக்கள், விரலில் போட்டிருந்த இரத்தின மோதிரங்கள் என எல்லாவற்றையும் கழட்டிக் கொடுத்து விட்டு தந்திரி அங்கிருந்து தப்பியிருக்கிறார். தப்பின தந்திரி சும்மா இருந்திருக்கக் கூடாதா? கேரளாவின் எர்ணாகுளம் காவல்துறையிடம் அவர் ஒரு முறைப்பாடு கொடுத்தார்.

'கொச்சியில் பாலாரிவட்டம் பகுதியில் வீடு கட்டும் வேலை நடந்துவருகிறது. அதைப் பார்ப்பதற்காக செங்கன்னு}ரில் மாலை 3 மணிக்குப் புறப்பட்டேன். கல்லு}ர் அருகே டாடா சுமோ மற்றும் குவாலிஸ் கார்கள் என் காரை ஓவர்டேக் செய்து மறித்து நின்றன. அதில் இருந்து 9 பேர் இறங்கினர். அவர்களது பிளாட்டில் விளக்கேற்றி வைக்க வேண்டும், 5 நிமிடத்தில் திரும்பி விடலாம் என்றார்கள். ஒரு பிளாட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

4 ஆவது மாடிக்குச் சென்றதும் ஒரு அறையில் என்னைத் தள்ளிக் கதவை மூடினர். என் ஆடைகளை அவிழ்த்துவிட்டு கட்டிலில் தள்ளினர். பின்னர், கறுத்த நிறத்தில் இருந்த பெண்ணை எனக்கு அருகே தள்ளிவிட்டனர். இரண்டு பேரின் தலைகளைச் சேர்த்து வைத்தும் நாங்கள் கட்டிப்பிடித்துக் கொண்டு கிடப்பது போலவும் போட்டோ எடுத்தனர். அந்த பெண் ஒட்டுத்துணிகூட இல்லாமல் நிர்வாணமாக இருந்தார். இரண்டு நிமிடத்திற்குப் பிறகு திரும்ப வந்தார்கள.; போட்டோவைக் காட்டி ரூ.30 லட்சம் கேட்டனர். கேட்டதைத் தராவிட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினர்.

நான் இங்கிருந்து போனால்தான் பணம் தரமுடியும் என்றேன். பணமோ, செக்கோ உடனே தர வேண்டும் இல்லாவிட்டால், போட்டோவை வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். என்னிடம் இருந்த செல்போன், பிரேஸ்லெட், மாலை, ரத்தின மோதிரங்களைப் பறித்துக்கொண்டு வெளியே விட்டனர்."

தந்திரி கொடுத்த முறைப்பாட்டை விசாரித்த காவல்துறை அவர் சொன்னது பஞ்சமா பாதகங்களில் இன்னொரு பாதகமான பொய் என்ற முடிவுக்கு வந்தனர்.

கண்டரரு மோகனரு கொடுத்த முறைப்பாட்டில் கூறியள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் சுமார் 22 வீடுகள் உள்ளன. தந்திரி அடைக்கப்பட்டதாகக் கூறிய அந்த வீட்டில் 2 பெண்கள் மட்டுமே உள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே பரத்தமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

குறிப்பிட்ட இந்த வீட்டிற்குக் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 20 முறைக்கு மேல் தந்திரி சென்று இருக்கிறார். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் அந்த வீட்டுக்குள் அவர் இருப்பார். அதன் பிறகே வெளியே வருவாராம். நீண்ட நாள்களுக்குப் பிறகே இந்த வீட்டுக்கு வந்து செல்வது சபரிமலை தந்திரி என்பதை அந்தப் பகுதி இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்பின் அவரைப் பிடிக்க திட்டம் போட்ட இளைஞர்கள் கடந்த 23 ஆம் நாள் வழக்கம் போல் அழகிகளின் வீட்டுக்குள் புகுந்த தந்திரியை சுற்றி வளைத்துப் பிடித்திருக்கின்றனர். அந்த பெண்களுடன் தந்திரி நெருக்கமாக இருப்பதைப் புகைப்படம் எடுத்துள்ளனர்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளிக்கு தந்திரியை நன்றாகத் தெரிந்திருக்கிறது. அடுக்குமாடி வாசலில் வைக்கப்பட்டு இருக்கும் வருகைப் பதிவேட்டில் குறிப்பிட்ட அந்த வீட்டிற்குச் செல்வதாக தந்திரி எழுதி இருக்கிறார்.

பரத்தையர்களுக்கு அந்த இடத்தில் பிளாட் வாங்கிக் கொடுத்துவரே தந்திரிதான். பிளாட்டின் உரிமையாளரான பெண்ணுக்கும் தந்திரிக்கும் ஏற்கனவே நெருக்கிய தொடர்பு உண்டு.

தந்திரி வரும் நாள்களில் வேறு எந்த ஆட்களையும் அந்த அழகி;கள் அனுமதிக்க மாட்டார்களாம். மேலும் அவர்களிடம் போகும் போது சபரிமலை அய்யப்பன் பிரசாதத்தையும் தவறாது கொண்டு போய் கொடுத்துள்ளார்.

இவ்வாறு தந்திரியின் முறைப்பாட்டை விசாரித்த எர்ணாக்குளம் காவல்துறை தெரிவிக்கிறது. இதற்கான ஆதராங்கள் அனைத்தும் தற்போது தங்களிடம் உள்ளதாக காவல்துறை மேலும் சொல்கிறது.

விசாரணை பற்றி எர்ணாகுளம் துணை காவல்துறை அதிபர் பத்மகுமார் கூறியதாவது:

நேற்று முன்தினம் (யூலை 23) அந்தச் சம்பவம் மாலை 6.30 மணிக்கு நடந்ததாக தந்திரி கூறினார். காவல்துறைக்கு இரவு 12.30 மணிக்கு முறைப்பாடு கொடுத்துள்ளார். அதுவும் தனது வழக்கறிஞர் மூலமாகத்தான் முறைப்பாடு கொடுத்தார். அப்போதே அவர் மீது காவல்துறைக்கு அய்யம் எழுந்தது.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தந்திரியுடன் காணப்பட்ட பெண் சேர்த்தலையைச் சேர்ந்தவர். விபச்சார வழக்கில் தேவரை என்ற இடத்தில் கைது செய்யப்பட்டவர். இப்படிப்பட்ட பெண் தனியாக வசிக்கும் குடியிருப்பில் தந்திரிக்கு என்ன வேலை?

தந்திரியுடன் இருந்த இளவயது பெண்ணிடமும் வீட்டின் சொந்தக்காரர் எனக் கருதப்படுகின்ற இன்னொரு பெண்ணிடமும் சிறப்புப் பிரிவு துணை ஆணையர் ஏ.பி.யோர்ஜ் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினார். முதலில் இளைஞர்களுக்கு உருபா 20 ஆயிரம் கொடுக்க தந்திரி முயற்சி செய்துள்ளார். பின்னர் கோடிக்கணக்கில் பேரம் பேசியுள்ளார்.

இதுபற்றிக் கேரள தேவசம் சபை அமைச்சர் சுதாகரன் கூறும்போது 'சபரிமலை விவகாரத்தில் புதிது புதிதாக பல பிரச்னைகள் முளைக்கின்றன. தந்திரி மீதான பயங்கர குற்றச்சாட்டு கேரள மக்களுக்கே பெருத்த அதிர்ச்சியாக உள்ளது. கேரள கலாசாரத்தையே அவர் அவமானப்படுத்தி விட்டார். இது குறித்து தேவசம் சபை முறையான விசாரணை நடத்த வேண்டும். அவரைக் கைது செய்து சிறையில் தள்ள வேண்டும்" குறிப்பிட்டார்.

பின்னே இருக்காதா என்ன? ஆண்டொன்றுக்கு 75 கோடி ரூபா வருமானமுள்ள மிகவும் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் ஆலய தலைமைப் பூசாரி பட்டப் பகலில் கோயில் பிரசாதத்தோடு பரத்தையர் வீட்டுக்குப் போகிறார் என்றால் அது கேரள கலாசாரத்துக்கு மட்டுமல்ல இந்து மதத்துக்கே பெரிய அவமானமாகும்.

சொர்க்கத்துக்கு வழிகாட்டும் பூசுரர்கள், பூசாரிகள், சாமியார்கள் விலைமகளிர் இருப்பிடங்களுக்குப் போய் பாலியல் தாக சாந்தி செய்து மாட்டிக் கொண்ட முதல் ஆசாமி இந்த தந்திரி மட்டும் என்றில்லை.

குஜராத் மாநிலம் தபோய் என்ற பகுதியிலுள்ள வட்தால் சுவாமி நாராயன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தைகளிடம் சாமியார்களான சந்த், தேவ் வல்லப் ஆகியோர் வரம்பு மீறி நடப்பதாகக் கோயில் நிருவாகத்துக்குத் தொடர்ந்து முறைப்பாடுகள் வந்திருக்கின்றன. அதுவும் கோயிலுக்குள் உள்ள குடிலிலேயே இந்தக் கூத்துகள் நடைபெற்றிருக்கின்றன என முறைப்பாடுகள் வந்தன. ஆனால், சாமியார்களைப் பிடிக்காத சிலர்தான் இப்படி பொய்ச் செய்திகளைப் பரப்புகிறார்கள் என்று கோயில் நிருவாகம் மறுத்து வந்தது.

இதையடுத்து சாமியார்கள் பெண்களுடன் இருப்பதை இரகசியமாக வீடியோ படமெடுத்து ஆதாரத்துடன் வெளியிடுவது என்ற முடிவுக்கு எதிர்த்தரப்பினர் வந்திருக்கின்றனர். அடுத்த கட்டமாக மினியேச்சர் வீடியோ காமிரா ஒன்று சாமியார்களின் குடிலுக்குள் பொருத்தப் பட்டது. இதையறியாத சாமியார்கள் வழக்கம்போல அறைக்குள்ளே பாலியல் கூத்தடிக்க.. அது அப்படியே வீடியோவில் பதிவாகி விட்டது.

வீடியோவில் பதிவான காட்சிகளை வி.சி.டி ஆக மாற்றம் செய்த எதிர்த்தரப்பினர் அதை குஜராத்தின் பிரபல பத்திரிகையான சந்தேஷ்க்கு அனுப்பி விட்டனர்.

அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட அனைவரின் முகங்களும் தௌ;ளத் தெளிவாகவே பதிவாகியிருக்கின்றன.

ஒரு பெண் அமர்ந்திருக்கும் காட்சி வீடியோவில் முதலாவதாக இடம் பெற்றிருக்கிறது. கோயிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்தப் பெண்ணின் பெயர் ரூபல்.

அடுத்து வெள்ளை பைஜாமா அணிந்த கோயிலின் பணியாளர் ஒருவர், பாய் மற்றும் தலையணையை அந்த அறையினுள் விரித்து விட்டுச் செல்கிறார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து தலையில் குடுமி, நெற்றியில் நாமம், கழுத்தில் உருத்திராட்சம், மார்பில் ப10ணு}ல், இடுப்பில் காவி சகிதமாகத் தோற்றமளிக்கும் சாமியார் தேவ் வல்லப் அந்த அறையினுள் நுழைகிறார். அறையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கினை தேவ் மெல்ல அணைக்க, அந்தப் பெண்ணோ, 'விளக்கை அணைக்கவேண்டாம் ப்ளீஸ்... அது எரியட்டும்" என்று தடுக்க, மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்யப்படுகிறது.

பின்னர் ரூபலை நெருங்கும் சாமியார், அவரது ஆடைகளைக் களைகிறார். 'வேண்டாமே" என்று மறுக்கும் ரூபலை, தனது வாயில் விரலை வைத்தபடி 'மூச்" என எச்சரித்து, காரியமே கண்ணாக சாமியார் இயங்க ஆரம்பிக்கிறார். முரண்டு பிடிக்கும் அந்தப் பெண்ணிடம் முரட்டுத்தனமாக தேவ் வல்லப் படர்ந்து கொள்ள, வேறு வழியின்றி அந்தப் பெண்ணே தனது உடைகளைக் களைகிறார். தேவ் வல்லப் தன்னுடைய இச்சையைத் தணித்துவிட்டு வெளியேற, அடுத்த விளையாட்டைத் தொடர சாமியார் சந்த் உள்ளே நுழைகிறார். தேவ் வல்லப்பிற்கு தான் சளைத்தவனில்லை என்பதைப் போல சந்த்தும் ரூபலிடம் உடலுறவு கொள்கிறார். இந்தக் காட்சியுடன் வீடியோ முடிந்து விடுகிறது. இந்தச் சம்பவம் நடந்தது எப்போது என்ற தெளிவான விவரம் ஏதும் தங்களுக்குச் சரிவரக் கிடைக்கவில்லை என்கிறது சந்தேஷ் பத்திரிகை.

இந்தச் செய்தியும், படங்களும் பத்திரிகையில் மட்டுமன்றி, சந்தேஷின் இணையதளத்திலும் வெளியாகி மிகப்பெரிய அளவிலான பரபரப்பு குஜராத்தைப் பற்றிக்கொண்டது.

கோயிலினுள் காமோற்சவம் நடத்திய சாமியார்கள் இருவரும் தங்களது அந்தரங்கம் அம்பலமானதையடுத்து அங்கேயிருந்து தப்பியோடிவிட்டனர். ரூபல் என்ற அந்தப் பெண்ணும் தலைமறைவாகி விட்டார். சாமியார்கள் இருவரும் கோயிலுக்கு அருகே உள்ள திருமண மண்டபத்தில் வேலை செய்யும் பெண்களையும், தங்களது குடிலுக்கு வரவழைத்து அனுபவித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சுவாமி நாராயன் கோயிலுக்குப் பெண்களின் வரத்துக் கணிசமாகக் குறைந்து விட்டிருக்கிறது.

இவை நடந்தது 2004 நொவெம்பரில். இப்போது கோயில் அர்ச்சகர்கள், சாமியார்கள் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

காந்தியார் கோயில்கள் விபச்சார விடுதியென்று சொன்னார்! அவர் வாய்க்குச் சர்க்கரையைத் தான் கொட்ட வேண்டும்.

மதம் ஒரு போதை. கடவுள், பக்தி, கோயில், குளம், ஜீவாத்மா - பரமாத்மா, நரகம் -சொர்க்கம் போன்றவை பக்திப் போதையை விற்பனை செய்யப் பயன்படுத்தும் வசீகரமான வார்த்தை சாலங்கள்! மனித சிந்தனைக்கு விலங்கிட்டு மனிதனை விலங்காகவே ஆக்கும் ஒரு வகை மூளைச் சலவை!

நடிகை ஜெயமாலா அய்யப்பனைத் தொட்டுக் கும்பிட்டதால் அய்யப்பனுக்கு தீட்டு என்று சொல்லி பெரிய பொருள்செலவில் பரிகாரம் செய்யப்பட்டது. இப்போது தந்திரியால் அய்யப்பனுக்கு தீட்டுப்பட்டுவிட்டதாம். அதற்கும் பரிகாரம் செய்யப்போகிறார்களாம்!

பாவம் அய்யப்ப பக்தர்கள். இவற்றை எல்லாம் படித்து விட்டு அவர்கள் அவமானத்தால் குளம், குட்டை ஒரு முழக் கயிறு, ஒரு துளி விஷம் ஆகியவற்றைத் தேடுவார்கள் என்று யாரும் நினைத்தால் அவர்கள் ஏமாறுவார்கள். பக்தி போதை அவ்வளவு சுலபத்தில் போய்விடாது!


Tuesday, August 29, 2006

இந்துத்துவ வெறியும், காந்தியின் கொலைகாரர்களும்

இந்து மதவெறி தேசியமயப்படுத்தப்பட்டு இது தான் தேசியம், அது தேசவிரோதம், அது பயங்கரவாதம் என ஒரு கூட்டம் நவீன-காவி-பாசிச-தேசியம் பேசி வருவகிறது. அதன் தொடர்ச்சியாக தேசியம் என்கிற மாயையை மத, இன அடையாளங்களுக்குள் அடைத்து இந்துத்துவ வெறிக்கு எதிராக குலரெழுப்புபவர்கள் அனைவரும் துரோகிகள், அவர்கள் வந்தேறிகள், விரட்டியடிக்கப்படவேண்டியவர்கள் என போலியான விளக்கங்கள் கூறி கரச்சேவை காலித்தனத்தை ஊடகங்கள், மேடைகள், அரசியல் அரங்குகள் வழி பரப்புரை செய்து வருகிறது. இந்த நிலையில் எது போலி, எது உண்மை, எது வரலாறு, எது திரித்தல் என்பதை இனம் காண அறியும் சுயதேடல் மற்றும் அவசியம் கருதி நான் கண்டெடுத்த சில வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்கிறேன்.

1948 ஜனவரி 30 சரித்திரத்தில் என்றும் மாறாத கொலைவெறியின் அடையாள நாள். ஆம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெரும் ப்ங்காற்றிய காந்தியை கொன்று இந்து வெறி பிடித்த பார்ப்பனீய கொள்கையாளர்கள் (இது ஒரு கருத்தியல் பற்றியதே தவிர குறிப்பிட்ட இனத்தை குறிப்பிட்ட சொல்லாடல் அல்ல) இரத்தத்தில் குளித்து எழுந்த நாள். காந்தி கொல்லப்பட்ட செய்தி நாடெங்கிலும் துயர அலையாய் பரவ, மராட்டிய மாநிலமெங்கும் பார்ப்பனர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இதன் பின்னணி என்ன? ஏன் இந்த கொலை வெறி? கோட்சே என்கிற காந்தியின் கொலைகாரன் தனிமனிதனா இல்லை ஒரு தத்துவமா? இல்லை ஒரு சமூகமா? தனி மனிதன் என்றால் ஏன் ஒரு ச்மூகமே காந்தியின் மரணத்தை கொண்டாட வேண்டும்?

காந்தி கொலை செய்யப்பட்ட 50 வருடங்களுக்கு பின்னர் காந்தியின் கொலைகாரர்களின் தத்துவத்தில் ஊறிய பாரதீய ஜனதா கட்சி இந்திய கூட்டமைப்பை ஆட்சி செலுத்த, கொலைகாரர்களின் குருவான சர்ச்சைக்குரிய வீர்சாவர்க்கர் நாடாளுமன்ற வளாகத்தில் சிலையாக அழகுபடுத்தப்பட்டிருக்கிறார். கொலைக்காரகளையும், கொலை செய்யப்பட்டவனையும் ஒரே நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து பார்க்கிற மனுநீதியின் அடையாள சின்னம் இது.

இன்று வலைப்பூக்களில் பிற மதங்கள், நாடுகள் மீது காழ்ப்புணர்வும், வக்கிரமும் குழைத்து துப்பும் மனநிலை பாதிப்பின் தொடக்கம் சாவர்க்கர் என்கிற சித்பவன் பார்பனரிடமிருந்து பிறந்தது தான். இந்து மத வெறியை பரப்பவும், பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள், அவர்களது பிடியில் இந்திய அதிகாரம் அனைத்தும் இருத்தல் வேண்டும், அகண்ட இந்தியா உருவாக்கப்படல் என்ற நோக்கத்திற்காக இந்து மகாசபை ஏற்படுத்தப்பட்டது. அதன் நடவடிக்கைகள் சாதி, மத மேலாண்மை வெறியை இளைய தலைமுறையினர் மத்தியில் வளர்த்தது. இன்றைய பா.ஜ.க தலைவர்களான அத்வானி, வாஜ்பாய் போன்றவர்கள் அந்த காலகட்டத்தில் இந்து மகாசபை நடவடிக்கை வழி உருவான இந்து தீவிரவாத தலைவர்கள் என்பதை நாடறியும்.

கலவரங்களை உருவாக்குவதும், வரலாற்றை திரித்து எழுதுவது, அதற்காக செயற்கையாக ஆதாரங்களை உருவாக்குவது, கொலை, வன்முறையில் ஈடுபட தயங்காத வெறிபிடித்த கூட்டத்தை பன்முக அமைப்புகளாக வளர்த்தெடுப்பது என பல யுக்திகள் கொண்டு செயல்பட துவங்கியது இந்து மகாசபையும் அதன் சார்பு அமைப்புகளும். ஆங்கிலேயர்களிடமிருந்து நாடு விடுதலையடையும் முன்னர் இந்து நாடு, இந்துஸ்தானி கலாச்சாரம், இந்தி மொழி என இந்துத்துவ வெறி கோட்பாடுகளில் கனவு கண்டு வந்த பார்ப்பனீயம் இந்தியாவில் இந்துத்துவ மதவெறி வளர்த்த வரலாற்றின் தொடக்கம் இது. இதற்கு அது கையாணட் யுக்திகள் என்ன?

இன்னும் தொடர்வேன்...

திரு

Wednesday, August 16, 2006

எனக்கு நாடுமில்லை, கொடியுமில்லை-(சுதந்திர தின)மீள்பதிவு

2000 ஆண்டின் தொடக்க காலம் அது... அந்த குளிர் காலையில் புது டில்லியிலிருந்து புறப்பட்ட எங்கள் புகையிரதம் (ரயில் வண்டி தான்!) அமிர்தசரசு மண்ணில் நின்றதும் நான் வைத்த முதல் காலடியில் என் கால்கள் கூசின. என் எண்ணங்கள் பகத்சிங்கின் நினைவில்...

யார் இந்த பகத்சிங்?
பிரிட்டிஷ்காரனிடமிருந்து விடுதலைக்காக இந்திய மக்கள் கிளர்ந்தெழுந்த நேரமது. அந்த 28 வயது நிரம்பிய வாலிபன் தனது சக தோழர்களுடன் விடுதலைக்கு கவனத்தை ஈர்க்க நாடளுமன்றத்தில் வெடிகுண்டுகளை எறிந்தான். துண்டறிக்கைகளும், கோசங்களும் ஆங்கிலேயனை வெறி கிளப்பியது. கைது செய்யப்பட்டு சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டான். இராணுவ நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கியது. கடைசி ஆசை என்ன என்று கேட்டார்கள், அவனிடமிருந்து வந்த பதில் உயிர் வாழ ஆசை என்பதல்ல! அந்த விடுதலை வீரன் "என் தாய் மண்ணுக்கு விடுதலை வேண்டும்...என் கண்களை திறந்தபடி என்னை தூக்கி கொல்லுங்கள்! என் தாய் மண்ணை பார்த்த படியே சாக வேண்டும்!" என்றான்.

இன்று நாங்கள்? "உயிர் மண்ணுக்கு! உடல் குஷ்புவுக்கு!" என்கிறோம்... விடுதலைத் தாயே! எங்கே தவறு செய்தோம்? சின்ன வயதில் எங்களுக்கு பேய் கதைகளும், கடவுள் புராணங்களையும், மன்னர்களையும் மண்டைக்குள் திணித்த எங்கள் "விடுதலை பெற்ற இந்தியா"! காந்தி உட்பட சிலரைத் தவிர வீரர்கள் எல்லோரையும் எங்களுக்கு மறைத்ததாலா?

அப்போதெல்லாம் விடுதலை நாள் என்றதும் என் மனதில் வருவதெல்லாம் அந்த ஆறஞ்சு சுளையின் சுவை கொண்ட இனிப்பும், அன்று மட்டும் எங்கள் கைகளில் திணிக்கப்பட்ட வண்ணக் காகித கொடியும். இது தான் விடுதலை என நினைத்து விடுதலையை (அந்த இனிப்பைத்தான்) வாங்க காசு தேடிய நாட்கள் தான் எத்தனை! வளர்ந்த போது தான் தெரிந்தது விடுதலை என்பது வேறு சமாச்சாரம் என்பது! அதைத் தான் இன்னும் தேடுகிறேன்!...

அன்றைய நாள் மாலைப்பொழுது.... சீக்கிய மதத்தின் புனிததலமான பொற்கோவிலில் நின்ற வேளை. எமது இராணுவத்தின் "நீல நட்சத்திர நடவடிக்கையின் விளைவுகள்" நெஞ்சை அடைத்தது. ஒன்றாக கூடி வாழ வந்த எமக்குள் எது தனி தேசங்களை கேட்கத் தூண்டியது? இராணுவத்தின் கொட்டடிகளில் சிதைக்கப்பட்ட உயிர்களை திருப்பித்தர இயலுமா?

தேசபற்று என்பது ஒருவகையில் ஒரு வெறி தான்! சேர்ந்து வாழ்வதால் வஞ்சிக்கப்படும் என் சகோதரனுக்கு பிரிந்து போய் தனி வாழ்க்கை அமைக்க அவனுடைய பங்கை கொடுக்க எப்படி விருப்பமில்லையோ அதே வெறி! தொடர்ந்த பயணத்தில் பாகிஸ்தான் - இந்தியா "வாகா எல்லையில்" நின்ற கணத்தில் விடுதலை தான் என்ன என ஆயிரம் கேள்விகள்! என் பாகிஸ்தானிய சகோதரனையும், என்னையும் பிரிக்கும் அந்த இராணுவ வேலியிலும், துப்பாக்கி குண்டுகளிலும் விடுதலை தேவதையின் கற்பு களங்கப்படுகிறதை கண்டேன்! இரு பகுதிகளின் மக்களையும் எளிதாக பழக விடாத இராணுவம் என் தேசதுக்கே சொந்தமானாலும் அது ஆக்கிரமிப்பு படைகளே!

கலங்கிய கண்களுடன் பாகிஸ்தானிய முகம் தெரியா என் உறவுகளை பார்வைகளால் தொட்டு கனத்த மனதுடன் திரும்பினேன். அப்போது தான் புரிந்தது இராணுவத்தின் தொல்லைகள். அதோடு அழித்துப் போட்டேன் ஒருகாலத்தின் என் இராணுவ கனவுகளையும், மாணவ பருவத்தின் "தேசிய மாணவர் படை" (இராணுவ) பயிற்சியின் சான்றிதழையும்.

அப்பொது உதித்தது என் சிந்தையில் "எனக்கு நாடுமில்லை, கொடியுமில்லை, எல்லைகளுமில்லை, நான் மனிதன்". யார் இந்த சில மனிதர்கள் என்னை இந்த நாட்டில் அனுமதிக்கலாமா அல்லது கூடாதா என்ற முடிவை எடுக்க? யார் இவர்களுக்கு இந்த உரிமையை தந்தது? எல்லைகளற்ற தேசங்களும், அடக்குமுறையில்லா அமைப்புகளும் இல்லாமல் போனது ஏன்? உலகில் இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் தான் எத்தனை விதங்களில்?தேசங்கள் தோறும் விடியலைத் தேடி அலையும் மக்களுக்கு நம்பிக்கை ஒளிகீற்று என்று தான் வருமோ? நினைவுகளை சுமந்தபடியே...

நினைவுகளுடன்...
திரு

Tuesday, August 15, 2006

ஹிந்து பத்திரிக்கையின் சிங்கள விசுவாசம்

இலங்கை, முல்லைத்தீவில் 16 குண்டுகளை வானிலிருந்து பொழிந்து 61 சிறார்களை அப்படியே புதைகுழிக்கு அனுப்பி வைத்திருக்கிறது இலன்கையில் புத்தன் வழி நடக்கும் சிங்கள அரச படைகள். இந்த குழந்தைகள் போராளிகளல்ல, அவர்கள் யுத்த பயிற்சியில் ஈடுபடவும் இல்லை, அவர்களது சடலங்களால் பிணக்காடாய் காட்சி தந்த செஞ்சோலை என்றளைக்கப்படுகிற அந்த வளாகத்தில் இராணுவ நடவடிக்கைகளுக்கான எந்த தடையமும் இல்லை என ஐ.நா குழந்தைகளுக்கான அமைப்பு, இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினரான நார்வே பிரதிநிதிகள் என அனைவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆனால், மீண்டும் மீண்டும் சிங்கள அரசு, சிங்கள தரப்பு மற்றும் கருணா குழு ஊடகங்களும் (அவற்றில் சில வலைப்பதிவுகளும் அடங்கும்) உண்மையை மூடிமறைத்து புலிகளை எதிர்ப்பதை அப்பாவி குழந்தைகளின் உயிர் மீது ஈவிரக்கமற்று கொடும் பரப்புரை மேற்கொள்ளுகின்றன. போரிடுவது அரசும் புலிகளுமாக இருக்கையில் அவர்கள் தரப்பில் உயிரிழப்புகள் வருவது யுத்த நடைமுறை என எடுத்துக்கொள்ளலாம். இந்த அப்பாவி மழலைகள் என்ன பாவம் செய்தார்கள், தமிழ் பகுதி குழந்தைகளாக பிறந்ததை தவிர அவர்கள் செய்த துரோகம் என்ன?

இந்த படுகொலையை கண்டிப்பதை விட்டு கொழும்பில் குண்டுவெடிப்பில் 7 பாதுகாப்பு படை வீரர்கள் கொலை செய்யப்பட்டதை கடுமையாக உலக நாடுகள் பத்திரிக்கைகள் என கண்டித்து செய்திகள், தலையங்கம் என வெளியிட்டிருக்கிறது. மழலைகள் உயிரையும், மனிதநேயத்தையும் விட சர்வாதிகாரத்தின் குரலுக்கு வல்லமை அதிகம் தானோ?

இந்திய ஊடகங்கள் சிங்கள சார்பு தன்மையில் செயல்படுகிறது என்பது கண்கூடான உண்மை. பார்ப்பனீயத்தை கட்டிக்காக்க மார்க்ஸீயம் பேசும் ராம் பணி செய்யும் இந்து பத்திரிக்கை நேற்றைய இலங்கை செய்திகளை எப்படி வெளியிட்டிருக்கிறது? கொழும்பு குண்டுவெடிப்புக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் சில வரிகள் கூட சிறார் படுகொலை பற்றிய செய்திக்கு கொடுக்கவில்லை. ஹிந்து ராம் இலங்கை அரசிடமிருந்து வாங்கிய அதிஉயர் விருதுக்கான நன்றிக்கடனா இது? அல்லது பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் உளவுப்படையினர் இந்திய ஊடகங்களில் இராணுவ பரப்புரை செய்கிறார்களா? என்ன இருப்பினும் பார்ப்பனீயம் சிங்களவர்களின் மச்சான் முறை தானே!

இத்தனைக்கும் கொழும்பு குண்டுவெடிப்பு பற்றி பல சந்தேகங்கள் எழுகின்றன. பாகிஸ்தானிய தூதுவரை கொல்ல புலிகள் இந்த இக்கட்டான நேரத்தில் ஏன் திட்டமிடவேண்டும்? இது 61 குழந்தைஅக்ளை படுகொலை செய்ததை உலகநாடுகலின் கண்டன பார்வையிலிருந்து திசைதிருப்ப இலங்கை இராணுவம் மற்ரும் அவர்களது உளவுப்படை, நட்பு உளவுப்படையினரின் திட்டமிடட்ட திசை திருப்பும் நாடகமாக ஏன் இருக்கக்கூடாது? எப்படியிருப்பினும், 7 இராணுவ வீரர்களது உயிரை விட 61 அப்பாவி குழந்தைஅக்ள் உயிர் ஒன்றும் குறைந்தவையல்ல. இந்த படுகொலைகள் போர்க்குற்றமாக கருதப்பட்டு தண்டிக்கப்படவேண்டியவை. யார் செய்திருந்தாலும் இந்த படுகொலைகள் குற்றமே.

திரு
15-08-2006

Friday, August 11, 2006

இராஜாஜியும் குலக்கல்வியும்-பாகம்2

கடந்த பதிவில் இராஜாஜி பற்றி நான் எழுதிய பதிவு வேறு மாதிரி இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டதால் இரண்டாம் பாகம் எழுத வேண்டியது ஆயிற்று. தினமும் 3 மணி நேரம் மட்டும் கல்வி பெற்று தொழிலும் பழகி அப்பன் செய்த தொழிலை தப்பாமல் மகனும் செய்ய அரிய வாய்ப்பை உருவாக்கிய ச. இராஜ கோபாலாச்சாரி (இராஜாஜி) பற்றி விமர்சனம் எழுதுவதா? அந்த திட்டம் மட்டும் நடைமுறையில் இருந்திருந்தால், இன்று தகப்பன் கடின வேலை செய்ய பிள்ளைகள் படித்த படிப்பிற்கான வேலை தான் பார்ப்பேன் என ஊர் சுற்றி வருவார்களா? இந்த ‘உயரிய’ சிந்தனையை படித்து சற்று விளக்கமாக எழுதவேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதை படித்த பின்னராவது வலைப்பதிவாளர் டோண்டு புரிந்துகொள்வார் என நம்பி இதை பதியவில்லை. இணைய ஊடகத்தில் தமிழ்மணம் ஊடாக பொய்யான தகவலை, பரப்புரையை வைத்து அடக்கப்பட்ட சமுதாய மக்களின் காயங்களில் குத்தி மீண்டும் புண்ணாக்குகிற கோரத்தை காட்டுவதே இதன் நோக்கம். பின்னூட்டங்களுக்காகவோ அல்லது பாராட்டுகளுக்காகவோ என் எழுத்துக்கள் அமையாது. இராஜாஜி மீது எனக்கு எந்த தனிமனித காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்பதை முதலில் தெளிவுபடுத்திக்கொள்கிறேன். ஆனால் இராஜாஜியின் குலக்கல்விக் கொள்கையை அதன் விளைவுகள் தமிழகத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை சமூகவியலாளன் என்ற முறையில் விமர்சிக்கிறேன்.

//எனக்கு வயது 60 முடிந்து விட்டது. மேலும் ராஜாஜியின் கல்வித் திட்டத்தைப் பற்றி எழுதுவதற்காகவே மெனக்கெட்டு அக்காலக் கட்ட கல்கி பத்திரிகைகளை படித்து விட்டு பதிவு போட்டவன். உங்கள் தகுதிகளைப் பற்றி இப்போது கூறவும்
...டோண்டு//

எனது தகுதி என்ன என்பது பற்றி டோண்டுவிற்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை, அப்படிப்பட்ட நிலையிலும் நான் இல்லை. வயதும், கல்கி இதழும் தான் வரலாற்று நிகழ்வுகளை பதிய, விமர்சிக்க தகுதியெனில் அதில் முரண்படுகிறேன். குறைந்தபட்ச ஆலோசனையாக டோண்டுவுக்கு சொல்ல விரும்புவது வேறு இதழ்களையும், நூல்களையும், அறிக்கைகளையும் கூட படியுங்கள். உங்களது ‘வட்டத்தை’ கடந்த மனிதர்களிடமும் இந்த பிரச்சனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தாங்களுக்கு பிடித்தமானவர் அல்லது தாங்கள் விரும்பும் கொள்கையை நடைமுறைப்படுத்த முனைப்பாக இருந்தவர் என்பதால் இராஜாஜியின் குலக்கல்வித் திட்டம் மக்களுக்கு நன்மையாக அமையுமா?

//நான் எனது பதிவில்; எழுதியதை சரியாகப் பார்க்காமல் உளறினால் என்ன செய்வது? உண்மை நிலைமை என்னவென்றால் அக்காலக் கட்டத்தில் குழந்தைகளை பள்ளிகளுக்கே அனுப்பாமல் முழு நேரமும் குலக்கல்வி தரப்பட்டது. அவர்களிடம் போய் "ஐயா, மூன்று மணி நேரமாவது பள்ளிகளுக்கு அனுப்புங்கள்" எனக் கூறப்பட்டது. அவ்வளவே. அதைப் புரிந்து கொள்ளாது அல்லது வேண்டுமென்றே புரிந்து கொள்ளாதது போல நடிக்கும் நீங்கள்தான் லாரி லாரியாகப் பொய்யை உதிர்க்கிறீர்கள்...டோண்டு//

டோண்டு சொல்வது போல எந்த பெற்றோரும் அல்லது இராஜாஜி தவிர வேறு எந்த அரசும் தமிழகத்தில் அல்லது அன்றைய சென்னை மாகாணத்தில் குலக்கல்வி கொள்கையை கொண்டுவர வில்லை. 1950 களில் பெற்றோர் பள்ளிக்கூடங்களுக்கு பிள்ளைகளை அனுப்பினார்களா இல்லையா என்பது இங்கு கேள்வியாக வருகிறது. இராஜாஜியின் ‘குலக்கல்வித் திட்டம்’ தடைகளை மீறி முயற்சி எடுத்தவர்களையும் முடக்கி வைத்து மூன்று மணி நேரம் மட்டுமே வகுப்பறை கல்வி, மீதி வேண்டுமானால் சுயமாக கற்றுக்கொள்ளுங்கள் என தூண்டியதா இல்லையா? அதுவும் அப்பன், பாட்டன், முப்பாட்டன் செய்த சாதீய அடிமைத் தொழில்களை செய்து சூத்திரனாக, பஞ்சமனாக இரு என பார்ப்பனீய தந்திரத்தை அரசு திட்டமாக நிறைவேற்றியதன் மூலம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் இராஜாஜி.

பெற்றோர் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாவிட்டால் அரசின் தலைமையை வைத்திருந்த இராஜாஜிக்கு அதற்கான காரணங்களை கழையும் திட்டங்களை ஏற்படுத்துவதை விட்டு வேறு என்ன வேலை? மக்களின் நெருக்கடி தாங்காது பதவியை விட்டு இராஜாஜி ஓடியதும் காமராஜரால் மட்டும் அதே ஆண்டில் பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டுவர முடிந்தது எப்படி? அதற்காக பல கிராமப்புற பள்ளிகளை உருவாக்க முடிந்தது எப்படி? மாணவர்கள் எண்ணிக்கை அளவிற்கு ஏற்ப ஆசிரியர்களை நியமனம் செய்ய முடிந்தது எப்படி? காமராஜருக்கு மட்டும் அதற்கான நிதி கிடைத்தது எப்படி? பாதிக்கப்பட்ட மக்களின் வேதனை அடக்குமுறை குலத்தில் பிறந்த இராஜாஜிக்கு புரியாமல் போனது வியப்பில்லை, பாதிக்கப்பட்ட வகுப்பில் பிறந்த காமராஜருக்கு அது புரிந்தது தான் கல்வித் திட்டங்களாக மறுமலர்ச்சி பெற்றது.

"அய்யா, மூன்று மணி நேரமாவது பள்ளிகளுக்கு அனுப்புங்கள்" என எங்கே போய் இராஜாஜி கெஞ்சினார்? அக்கிரகாரத்து பிள்ளைகள் கல்வி பெறும் வேளை, பஞ்சமன் வீட்டு பிள்ளை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் கொல்லையில் பீ அள்ளவும் சாணி பொறுக்கவும் பரம்பரை பரம்பரையாக தொடர வைக்க இராஜாஜி நினைத்து வடித்த திட்டம் தான் குலக்கல்வித் திட்டம். அது மட்டுமல்ல நிதிப்பற்றாக்குறை என்ற ‘காரணத்தை’ காட்டி தமிழகமெங்கும் சுமார் 6000 பள்ளிக்கூடங்களை மூடினார் அந்த ‘அறிவுமேதை’.

இராஜாஜிக்கும் அவர் சார்ந்த குலத்தினருக்கும் இந்த திட்டத்தின் அவசியமென்ன?
மயங்கி கிடந்த மன்னர்களுக்கும், ஆங்கிலேய அடக்குமுறையாளர்களுக்கும் பிராமணர்கள் காலங்காலமாக ‘சேவைகள்’ செய்து அனுபவித்து வந்த பதவிகள், பட்டங்கள், அதிகாரம், கல்வி முதலியவைகளுக்கு ஆபத்து அரசியல் சட்டம் வடிவில் வந்தது. அந்த காலகட்டத்தில் பெரியாரின் இயக்கப் பணிகள் தமிழகத்தில் பார்ப்பனீய ஆதிக்கத்தை அசைக்க துவங்கியிருந்தது.

26, ஜனவரி 1950ல் இந்தியா அரசியல் சாசனத்தை பிரகடனம் செய்து குடியரசாகிய பின்னர், பிராமணர்கள் சென்னை உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்சநீதிமன்றத்திலும் சென்று, வரலாற்று ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு’ வழங்க இருந்த முறை violated the fundamental right to non-discrimination (முறையாக புரிந்துகொள்ள ஆங்கில வார்த்தைகளில்) ஆகவே அதை நீக்கவேண்டும் என கோரினர். நீதிமன்றங்களில் நிறைந்திருந்த பார்ப்பனீயமும் சமூகநீதியை நிலைநாட்ட இருந்த முறையானது அரசியல் சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பெரியார் தலைமையில் போராட்டங்கள், கூட்டங்கள் என எதிர்ப்பு கிளம்பியதன் வெளிப்பாடு தான் அரசியல் சட்டம் திருத்தப்பட்டு Clause 4 to the Article 15: "Nothing in this article or in clause (2) of Article 29 shall prevent the State from making any special provision for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes and the Scheduled Tribes." என்ற பகுதி அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. (பெரியார் என்றாலே வேப்பங்காயாக பிராமணீயத்தில் ஊறியவர்களுக்கு கசப்பதன் மூலகாரணம் இந்த திருத்தம்). அன்று பெரியார் மட்டும் இந்த அரசியல் போராட்டத்தை நடத்தாமல் இருந்திருந்தால் இன்று தமிழகமெங்கும் குலக்கல்வியில் பீ அள்ளும் கூட்டம், சாணி பொறுக்கும் கூட்டமாக தான் இருந்திருக்கும். இப்போதைய இடஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையே அரசியல் சாசனம் வழங்கிய இந்த உரிமையின் அடிப்படையில் சட்டரீதியாக வழங்கப்படுகிற உரிமை (பிச்சையுமல்ல, சலுகையுமல்ல).

இந்த அரசியல் சட்டத்திருத்தம் வழியாக பிராமணரல்லாதவர்கள் கல்வி பெறுவதற்கான ஒதுக்கீடுகள் வர வாய்ப்புள்ளதையும் அதன் வழி கல்வி பெற்று இந்த சமுதாயத்தில் பிராமணனும், சக்கிலியனும் மனிதன் என்ற விதத்தில் சமமே என வந்தும் என்பதை கணிப்பிட்டது இராஜாஜியின் பிராமணீய அறிவு. அதை தடுக்க இராஜாஜி வடித்தெடுத்த திட்டம் தான் குலக்கல்வித் திட்டம். குலக்கல்வித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தியிருந்தால் அதன் விளைவாக தொடர்ந்து உயர்ந்த குலம், தாழ்ந்த குலம் என்ற வேறுபாடு இன்று இருப்பதை விட பல்லாயிரம் மடங்கு அதிகமாக இருந்திருக்கும். (இதற்கு மேல் இது பற்றி விளக்கம் அவசியமில்லை என கருதுகிறேன்). இராஜாஜியின் திட்டம் தொழிற்கல்வி என இன்னும் சாதிப்பவர்களுக்கு நேரம் கிடைக்கும் வேளை கருத்துக்களை விளக்கமாக பதிவு செய்யலாம்.

//இன்னொரு விஷயம், குலக்கல்வித் திட்டம் என்பது அதன் பெயரே விஷமத்தனமாகக் கொடுக்கப்பட்டது. அதை பிடித்துக் கொண்டு நீங்கள் தொங்குவதுதான் பரிதாபம் … டோண்டு//

விசமமான திட்டத்திற்கு கொடுத்த சரியான பெயர் அது. குலக்கல்வி திட்டம் என அது பெயரிடப்பட்டதில் தவறில்லை. அந்த திட்டத்தின் உள்ளே ஒளிந்திருந்த சூட்சுமம், சாதீய வர்ணமுறையை கட்டிக்காக்கிற ‘ராஜரிசி’ சாணக்கியத்தனம் அது தான் தெரிந்தே செய்த அயோக்கியத்தனம்.

//அப்படியென்றால் 1952-ல் ஏன் எல்லோரும் அவர் காலில் போய் விழுந்தார்களாம்? அவர் இருந்த இரண்டு வருடங்களும் எவ்வளவு நெருக்கடியான ஆண்டுகள் என்பதை அறிவீர்களா?// இராஜாஜியிடம் யாரும் காலில் விழுந்து அழைத்து வரவில்லை. இராஜாஜியின் சித்து விளையாட்டுகளில் மயங்கிய காங்கிரஸ் தலைமை அவரை முதலமைச்சராக பதவியிலமர்த்தியது என்பதும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவரல்ல என்பதும் தான் உண்மை. காங்கிரஸ் செய்த இமாலய தவறுகளில் ஒன்று தமிழகத்தில் இராஜாஜியை முதல்வராக்கியது என்பது காலம் கடந்த உண்மை. நோயினால் இராஜாஜி பதவி துறந்ததாக டோண்டு குறிப்பிடுவது உண்மைக்கு மாறான தகவல். மக்களின் எதிர்ப்பு தாங்காது இராஜாஜி பதவியை துறந்தார் என்பதும், அந்த எதிர்ப்பு குலக்கல்வித் திட்டத்திற்கு எதிரானது என்பதும் வரலாற்று உண்மை. இராஜாஜி பதவியை இழந்ததால் தமிழகம் இழந்தது அடுத்த 30 ஆண்டுகளில் பிராமணீய ஆதிக்கம். இராஜாஜி பதவி இழந்ததால் தமிழகம் பெற்றது ஏராளம் அவற்றுள் ஒன்று காமராஜர் என்கிற கருப்பு சூரியன் எல்லோருக்கும் வழங்கிய நிறைவான செல்வம் கல்வி!


திரு

இராஜாஜியும் குலக்கல்வியும்

இராஜாஜியும் குலக்கல்வியும்

கிழக்கிந்திய கம்பெனியார் 1773ல் உருவாக்கிய துருபிடித்த ஆங்கிலேய அடக்குமுறையின் அடையாளமான கவர்னர் ஜெனரல் பதவியை கடைசியாக அலங்கரித்த பெருமை சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி அவர்களைச் சாரும். 1950இல் இந்தியா குடியரசாக மாறி அரசியல் சாசனத்தை நிறைவேற்றியது முதல் இராஜாஜியுடன் அந்த துருப்பிடித்த பதவியும் முடிந்தது. இராஜாஜி கொண்டுவந்த “குலக்கல்வியின்” அருமை பெருமைகளை மூடி மறைத்து பதிவுகள் வருவதாக மனம் நொடிந்து மீள்பதிவு போட்டு வலைப்பதிவாளர் டோண்டு லாறி நிறைய பொய்யை ஒரு வலைப்பதிவில் மறைக்கப் பார்க்கிறார். இதன் உண்மை வரலாறு இன்று 60 அல்லது 70 வயதானவர்களுக்கு அல்லது இது சம்பந்தமான நூல்களை படிப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அதனால் குலக்கல்வி பற்றிய உண்மையை சமகால மனிதர்களுக்கு உரக்கச் சொல்லும் விதமாக இந்த வெளிப்படையான பதிவு.

அன்றைய சென்னை மாகாணத்தின் முதல்வராக 1952 முதல் 1954 வரை இராஜாஜி இருந்தார். அவர் கொண்டு வந்த திட்டம் தான் “குலக்கல்வி” என தந்தை பெரியார், அண்ணா, பிராமணரல்லாதவர்கள், காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையினர் என துவங்கி முதல் சாதாரணமானவர்கள் வரை எதிர்த்த திட்டம். அந்த திட்டம் என்ன? அதாவது, தினமும் மூன்று மணி நேரம் மட்டுமே கல்வி. மீதி நேரம் தகப்பன் செய்யும் தொழிலை கற்றுக் கொள்ளலாம் இல்லையேல் கட்டாயமில்லை, வேறு தொழிலும் பழகலாம். எவ்வளவு அருமையான திட்டம்?

அதாவது இராஜாஜி போன்ற பார்ப்பனர்கள் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு சேவை செய்து சேகரித்த அரசு வேலைகளில் அவர்களது பிள்ளைகள் சுகம் காண அருமையான ஆரிய திட்டம். அதாவது இராஜாஜியின் அப்பா கிராம முன்சிப் வேலை பார்க்கிறார் என்றால் மகன் இராஜாஜி பள்ளியில் படித்து, சட்டம் பயின்று, ஆங்கிலேய ஆதிக்க அரசின் சென்னை மாகாண பிரதம அமைச்சராகி, இடைக்கால அரசில் பங்கு பெற்று பதவி சுகத்தில் நெளியலாம். அதே வேளை முடிவெட்டுகிற குப்பனின் மகன் பள்ளிக்கு செல்லலாம் அங்கு மூன்று மணி நேரம் இருந்து விட்டு வந்து முடிவெட்ட தகப்பனாருடன் வீடு வீடாக சென்று ‘தொழில்’ பழகலாம். அப்படியே காலப்போக்கில் படிப்பை நிறுத்தி முடி திருத்தும் தொழிலில் ஈடுபடலாம். என்ன உயரிய சிந்தனை? துணி வெளுப்பவன் மகன் துணி வெளுக்கவும், பிணம் புதைப்பவன் மகன் பிணம் புதைக்கவும், மீன் விற்பவன் மகன் மீன் விற்கவும், மணியாட்டி பூஜை செய்பவன் மகன் மணியாட்டவுமான சாதிச் சாக்கடையை கட்டிக்காக்கிற சாக்கடை நாற்றெமெடுக்கிற ஆரிய சிந்தனையின் வக்கிரம் தான் இராஜாஜியின் குலக்கல்வித் திட்டம்.

அன்று இந்த குலக்கல்வித் திட்டத்தை முழுவேகமாக சிலிர்த்தெழுந்து சிங்கமாக தந்தை பெரியார் எதிர்த்ததால் இன்று அனைவருக்கும் அடிப்படைக் கல்விம் தொழில்நுட்ப கல்வி என்பது நடைமுறையாகி இருக்கிறது. அந்த எதிர்ப்பை தாங்காது இராஜாஜி பதவியை துறக்க நிற்பந்திக்கப்பட்டார் என்பதும் உண்மை. (டோண்டு சொல்வது போல நோயினால் இராஜாஜி பதவியை துறக்கவில்லை. இராஜாஜி பதவி துறந்தது 1954, அதற்கு பின்னர் அரசியலில் ஈடுபட்டார் என்பதும் 25ம் டிசம்பர் 1972 வரை இராஜாஜி உயிர் வாழ்ந்தார் என்பதும் உண்மை. இறக்கும் தருவாயில் குறுகிய காலம் மட்டுமே நோயுற்றிருந்தார்). எதற்காக இராஜாஜி நோயினால் பதவி துறந்ததாக பொய்யுரை? சிறந்த நிர்வாகி, அறிவுக்கடல் என புகழப்படுகிற இராஜாஜி குலக்கல்வித் திட்டத்தின் எதிர்ப்பை தாங்காது பதவியை இழந்தார் என உண்மையை ஒத்துக்கொண்டால் இழுக்கு என்பதாலா?

//குழந்தைகள் இரண்டு வேளையும் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த முறை அமுலில் இருந்தது. பல ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கே வர இயலாத நிலை. நிதி நிலைமை ரொம்ப மோசமாக இருந்தது. 40 லட்சம் குழந்தைகள் பள்ளி செல்லும் வயதில் இருந்தனர். பல பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் இல்லை, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை. // இந்த நிலையில் அனைவருக்கும் கல்வியும், தொழிற்கல்வியும் வழங்குவது தான் இராஜாஜி கொண்டுவந்த திட்டம் என அடுத்த பொய்யுரை.

இராஜாஜி பதவியிழந்த பின்னர் தந்தை பெரியாரால் ஆதரவளிக்கப்பட்டு படிக்காத மேதை காமராஜர் முதலமைச்சரானார். முதல்வரை தேர்ந்தெடுக்க நடந்த வாக்கெடுப்பில் தன்னை எதிர்த்த சி.சுப்பிரமனியம் (இராஜாஜியின் ஆதரவு பெற்றவர்) 41 வாக்குகள் பெற்றிருக்க 93 வாக்குகள் பெற்று காங்கிரஸ் உறுப்பினர்களால் 31ம் மார்ச்ம் 1954இல் தேர்ந்தெடுக்கப்பட்டர் காமராஜர். அந்த வாக்கெடுப்பு கூட்டத்தை தலைமை தாங்கியது இராஜாஜி. குலக்கல்வி திட்டத்தை ஒழித்ததோடு அதிக எண்ணிக்கையில் பள்ளிகள், கல்லூரிகளை திறந்து அனைவருக்கும் கல்வியை தந்து இந்தியாவிற்கே கல்வியில் முன் மாதிரியை ஏற்படுத்தியவர் காமராஜர். இலவச கல்வி முறை, மதிய உணவு திட்டம் என சமூக நோக்கான உயர்ந்த திட்டங்களை கொண்டுவந்து ஏழை வீட்டு பிள்ளைக்கும் கல்வி கிடைக்க செய்தார். அதன் விளைவு தான் இன்று பிராமணர்கள் மட்டுமல்ல அனைவருக்கும் கல்வி என்பது நடைமுறையானது. பிணம் புதைப்பவன் மகன் மருத்துவம், சட்டம், பொறியியல் என படிக்க முடிந்தது. (திராவிட இயக்கங்களின் சாதனை, தாக்கமென்ன என முகமூடியணிந்து கேட்பவர்களுக்கு இதுவும் சாதனைகளில் ஒன்று என்பது புரியட்டும்.)

இராஜாஜி பதவியை விட்டு இறங்கியதும் அரசுக்கு நெருக்கடி தீர்ந்தது எப்படி? பள்ளிகளுக்கு கட்டிடங்கள், ஆசிரியர்கள், புதிய பள்ளிகள், கல்லூரிகள், மதிய உணவு என திட்டங்கள் வந்தது எப்படி? அப்படியானால் இராஜாஜிக்கு நிர்வாக திறனில்லை! அல்லது அவர் சார்ந்த பிராமண குலத்தின் வேதங்கள் சொல்லுகிற சாதியை கட்டிக்காக்க அரசு திட்டங்கள் தீட்டி தனது ‘சாணக்கியத்தனத்தை’ நிரூபித்தார். அந்த குலக்கல்வி சாணக்கியம் காமராஜர், பெரியார், அண்ணா என்கிற திராவிடர்களால் அழிக்கப்பட்டது என்பது வரலாறு.

இராஜாஜியின் குலக்கல்வி திட்டம் மனிதனை அடிமையாக வைத்திருக்கும் தந்திரமுடையதே தவிர கல்வியை வழங்குவதோ அல்லது வேலைவாய்ப்பின்மையை கழையும் நோக்கமுடையதோ அல்ல. வேலையில்லா திண்டாட்டத்தையும் அதன் காரணங்களையும் புரியாவிடில் இப்படிப்பட்ட உப்பு சப்பில்லாத பொய்யுரைகளை நிறுத்துவது நல்லது. கல்வி பயிலும் பிராமணரல்லாத ஒவ்வொருவரும் மனதில் நிறுத்த வேண்டிய தலைவர்கள் பெரியார், அண்ணா, காமராஜர் என்பதை தமிழக வரலாறு பதிவு செய்துள்ளது. இதை ஓராயிரம் பதிவுகள் எழுதினாலும் அழிக்கமுடியாது.

திரு

Tuesday, August 08, 2006

இலங்கையின் இராஜதந்திரம் தோல்வியா?

அதிகாரத்தின் பிடி சறுக்கும் வேளை தறிகெட்டு ஆடுவது அடக்குமுறையாளர்களுக்கான பொதுவான இலக்கணம் என்பதை இலங்கை அரசும், அதன் படைகளும் உறுதிப்படுத்தி வருகிறது. இலக்குகளும், கட்டுப்பாடுகளும் இல்லாத மத யானை போல தனது மக்களை தானே கொன்று, தனது தலையில் தானே வெடிகுண்டை போட்டு மகிழ்கிறது மகிந்த ராஜபக்சே அரசு. பாவம் அரச அணுகுமுறையற்ற ஒரு அரசிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க இயலும்?

திரிகோணமலைப் பகுதியில் மாவிலாறு அணைக்கட்டு மதகுகளை மூடி சிங்களப் பகுதி வாழ் மக்களின் பயிர் விளைச்சலுக்கு தண்ணீர் கிடைக்காமல் செய்திருக்கிறார்கள். இதை திட்டமிட்டு செய்தது புலிகள் என்கிறது அரசு. இலங்கை அரசின் அடக்குமுறையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே இதை செய்தனர் என்கிறார்கள் புலிகள். புலிகளின் துணையில்லாமல் இந்த நடவடிக்கை நடக்க வாய்ப்பில்லை. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் என கொழும்பு முதல் புதுடில்லி வரை அதிகார இரத்தம் கொதிக்கிறது. எதற்காக இந்த நடவடிக்கை?

பல வருடங்களாக தமிழ் மக்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உரம், சிமெண்ட், முதலிய அடிப்படை பொருட்களை கூட அனுமதிக்காது பொருளாதார தடையை வைத்திருக்கிறது இலங்கை அரசு. சுனாமி பேரழிவில் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் தமிழ் குடும்பங்களுக்கு எந்த உதவியும் அனுமதிக்காது அவர்களை பேராபத்தில் தள்ளியது அரசு. உலக நிறுவனங்களும், நாடுகளும் அனுப்பிய உதவித்தொகை, பொருட்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களை பெருந்துயரில் ஆழ்த்தியது அரசு. சுனாமி பேரழிவு நடந்து சுமார் 17 மாதங்கள் கடந்த பின்னரும் வடகிழக்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்களது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. பயிருக்கு தண்ணீர் விடாமல் தடுக்கிறார்கள் என கவலைப்படுகிறவர்கள் இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயல்களை கண்டிக்க தவறியதன் விளைவு இலங்கை அரசை இன்று இந்த நிலைமைக்கு தள்ளியிருக்கிறது.

சுனாமி பேரழிவு புனரமைப்பு, மறுவாழ்வு ஆகியவற்றை பயன்படுத்தி இந்தோனேசிய அரசு ஆச்சே பகுதியில் நல்லெண்ண நடவடிக்கைகள் ஏற்படுத்தி போராளிகளுடன் சமாதானத்தை நிறுத்தியதிலிருந்து கூட நல்ல பாடம் கற்றுக்கொள்ள சிங்கள தலைவர்கள் தவறிவிட்டனர். இனவாதமும் ஒற்றையாட்சி முறையும் ஆட்டி வைக்க மக்களது வாழ்வு புறந்தள்ளப்பட்டது. தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறவேண்டிய மிக அரிய வாய்ப்பை தென்னிலங்கையின் அதிகாரப் போட்டியில் அரசு தவறவிட்டது.

தொடர்ந்து அரசு எடுத்த நடவடிக்கைகளின் எதிர்விளைவு புலிகள் தரப்பில் பலத்தை உருவாக்கியது. வடகிழக்கு பகுதியில் இராணுவமும், துணை குழுக்களும் நடத்திய படுகொலைகள் இலங்கை அரசு சமாதானம் மீது கொண்ட நம்பிக்கையை கேள்வியெழுப்பியது. பதிலுக்கு புலிகளின் தாக்குதல்களும் அதன் விளைவான உயிரிழப்புகளும் சமாதானத்தின் இருப்பை கேள்வியெளுப்ப வைத்தது. புலிகளை ஐரோப்பிய யூனியன் தடை செய்ததன் விளைவு புலிகளுக்கும் அரசிற்கும் சமாதான மேசை மீது நீங்காத பிளவை ஏற்படுத்தியது. அரசு தரப்பு அதை வெற்றியாக கொண்டாடினாலும், இனப் பிரச்சனையை தீர்ப்பதில் மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழர் குடியிருப்பு பகுதிகளில் அரசு விமான தாக்குதல்களை மீண்டும் துவங்கியது. புலிகளின் இராணுவ, இராஜதந்திர வலையில் அரசின் உள்நாட்டு நடவடிக்கைகள் சிக்கி தவிக்கிறது. தமிழ் மக்கள் அரசையும் இராணுவத்தையும் நம்ப முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வண்ணமாக மாவிலாறு மதகு மூடப்பட்டது. பேச்சுவார்த்தையில் பிரச்சனையை முடிப்பதற்கு பதிலாக அரசு புலிகளின் பொறியில் சிக்கி இராணுவத் தீர்வு மீது நம்பிக்கை கொண்டு வான்வெளி தாக்குதலை தொடர்ந்து அப்பாவிகளை கொன்று குவித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக புலிகளுக்கும் இராணுவத்திற்கும் நடந்த சண்டையில் இராணுவம், புலிகள், பொதுமக்களுக்கு என அளவற்ற உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கிறது.

இந்த யுத்தம் தண்ணீருக்கானதா இல்லை அதற்கும் மேலாக வேறு அம்சங்களை உள்ளடக்கியதா? தண்ணீருக்கான யுத்தமாக இருந்தால் நார்வே தூதரின் பேச்சுவார்த்தைக்கு இணங்கி மாவிலாறு மதகுகளை திறக்க சென்ற புலிகள் தளபதி.எழிலன் மற்றும் நார்வே கண்காணிப்பு குழுத் தலைவர் மீது இலங்கை படைகள் செல் குண்டுகளை வீச அவசியமென்ன? மாவிலாற்று அணைக்கட்டை இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றினால் இலங்கை அரசுடன் ஜே.வி.பி கட்சி இணைந்து கொள்ளும் என அக்கட்சியின் தலைவர் சோமவன்சா தெரிவித்ததை அடுத்தே அரசு இராணுவ நடவடிக்கையை மீண்டும் ஆரம்பித்துள்ளது என தமிழர் தரப்பு நம்புகிறது.

கண்காணிப்பு குழுத் தலைவர் இருந்த பகுதியில் இராணுவம் குண்டு வீசிய பிரச்சனை அடங்கும் முன்னர் பதினைந்து தனியார் தொண்டு நிறுவன ஊழியர்களை தரையில் படுக்க வைத்து சரமாரியாக சுட்டு இராணுவம் நிகழ்த்திய படுகொலை வெளிவந்திருக்கிறது. இந்த இரத்தவெறிக்கு மகிந்த ராஜபக்சா அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?

'மாவிலாற்று அணைக்கட்டை திறப்பதற்கு இலங்கை அரசு மேற்கொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கை முழுமையான யுத்த நிறுத்த மீறல் என கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் மாவிலாற்று நீரை திறந்து விடுவதற்கு முன் வந்த வேளையில் இலங்கை அரசு விடுதலைப்புலிகள் மீது வலிந்த தாக்குதலை மேற்கொண்டிருப்பதாக கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் றொபினேர் ஒமன்சன் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண இலங்கை அரசு விரும்பவில்லை எனவும் மக்களுக்கு நீர் கிடைப்பதை விட இந்த அணைக்கட்டு விவகாரம் மூலம் யுத்தம் செய்யவே சிறீலங்கா அரசு விரும்புவதாகவும் தெரிவித்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் றொபினேர் ஒமன்சன் தற்போதைய நிலைக்கு சிறீலங்கா அரசாங்கமே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார். '

நீண்டகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர கூட்டணி கட்சிகளின் நெருக்கடிகளுக்கு இடம் கொடுக்காமல் அரசு பேச்சுவார்த்தைகளில் முழு கவனம் செலுத்தி இருதரப்பு நம்பிக்கை நடவடிக்கைகளை உருவாக்கினால் மட்டுமே நிரந்தர சமாதானத்தை உருவாக்க இயலும். அரசிற்கும் அதன் அதிகார தலைமைக்கும் சமாதானம் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை அவசியம்.

இலங்கை அரசுக்கு சமாதானம் மீது பற்று வர இந்திய அரசும், அதன் உளவு அமைப்புகளும் வழங்குகிற ஆலோசனை, இராணுவ உதவி நிறுத்தப்பட்டு சமாதானத்தை நோக்கிய அரசியல் மற்றும் துறை ரீதியான அழுத்தம் கொடுக்கப்படவேண்டும். பேச்சுவார்த்தை நடைபெறும் முன்னரே இந்தியா போன்ற ஒருங்கிணைந்த தீர்வு, ஒன்று பட்ட இலங்கையில் தமிழர்களுக்கு சமாதானம் என தனது சொந்த பூகோள அரசியல் நலனை திணிப்பதை இந்திய அரசு நிறுத்துவது மிக அவசியம். பிரச்சினையின் தன்மை, அதன் இன்றைய நிலமைகள் இவற்றை கணக்கிலெடுத்து சண்டையிடும் இருதரப்பினருக்கும் நம்பிக்கையுள்ள நாடாக இந்தியா உருவாவது மிக அவசியம். இரு தரப்பையும் கலந்து பேச வைத்து தீர்வை அவர்களே இணைந்து உருவாக்க உதவுவது மட்டுமே நன்மை தரும். இந்தியாவின் சொந்த தீர்வு திட்டங்களை திணிப்பது புதுடில்லியின் ஆதிக்கவெறி சிந்தனையாளர்களால் பூகோள அரசியலில் இந்தியாவிற்கு என்றும் நீங்காத தோல்வியை தேடி தரும்.

இலங்கை இனப் பிரச்சனையில் இருதரப்பு பிரச்சினைகள், அதன் அடிப்படை காரணங்கள், இருதரப்பு உரிமை மீறல்களை பக்க சார்பற்ற செய்தியாக மக்களுக்கு வழங்கும் கடமை இந்திய பத்திரிக்கைகளுக்கு உண்டு. இந்து போன்ற பத்திரிக்கைகள் இனப் பிரச்சினையில் இலங்கை அரசின் அறிவிக்கப்படாத நாளேடாக செயல்படுவதை நிறுத்துவது தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் அவர்களது வாழ்வை அழிக்காமல் செய்யும் பேருதவியாக இருக்கும்.

புலிகள் தரப்பு தமிழர்களது லட்சியமான தமிழீழம் வேண்டுமென்கிறார்கள். இனப் பிரச்சனைக்கு அரசு தரும் தீர்வு என்ன? ஒன்று பட்ட இலங்கை என்று சொன்னதை திரும்ப திரும்ப சொல்லி சிறுபான்மை இனத்தவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள தாயாரில்லை என்பதை தெளிவுபடுத்தி வருகிறது சிங்கள ஆதிக்கம். இனப் பிரச்சனைக்கு எந்த அரசியல் தீர்வுகளும் இல்லாமல் நாளுக்கொரு விதமான பேச்சும் அறிக்கை என லகான் இல்லாத குதிரை போல தறிகெட்டு ஓடுகிறது இலங்கை அரசு. இராணுவத் தீர்வை மட்டுமே நம்பி அரசியல் சுழலும் நாடு அழிவில் தான் முடிந்திருக்கிறது. 'இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பாரினாலும் கெடும் ' இந்த குறள் இனப் பிரச்சனையில் இலங்கை அரசுக்கு பொருத்தமாக அமையும். இந்த உண்மையை புதுடில்லியின் ஆலோசகர்களும், திட்ட வரைவாளர்களும் உணர்வார்களா? இல்லையேல் இலங்கை அரசின் நடவடிக்கைகள் சாதாரண மக்களது வாழ்வில் பெருந்துயரை உருவாக்குது தொடரும். இலங்கை தேசத்தில் ஒரு தோல்வியான அரசை உருவாக்கிய பெருமை இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்ற அடிப்படையில் இந்தியர்கள் அனைவருக்கும் கிடைக்கும். ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என்ற வரிகளின் வீரிய சிந்தனை நமக்கு எப்போது விளங்கும்?

சமாதானத்திற்கான குரலுடன்,
திரு

Sunday, August 06, 2006

ஞானம் அணுகுண்டு அழிவில் பிறக்கும்! (மீள் பதிவு!)

இன்று உலகில் அமெரிக்கா முதல் அணுகுண்டு போட்டு ஹிரோஷிமா வாழ் மக்களை கொன்று அழிவை ஏற்படுத்திய நாள். அதன் நினைவாக இந்த மீள் பதிவு!

ஹிரோஷிமா நகரம், ஜப்பான். 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத குளிரில் ஒரு நண்பகல் பொழுது. அந்த அமைதி பூங்காவில் நின்ற பொழுது என் ஒவ்வொரு அணுவும் நடுக்கத்தால் மோதியது. இந்த மண்ணில் அமைதிக்கு தான் எத்தனை சோதனை! யுத்த வெறி பிடித்த ஒவ்வொரு முரட்டு மனமும் தரிசிக்க வேண்டிய தலம் அது. கருகிய மனித வரலாற்றின் கருவறை அது. அந்த இடத்தில் ஞானம் பிறக்காதவர்களுக்கு போதி மரத்தடியிலும் புத்தி வராது! அந்த பொழுதை நினைக்கையில் இன்றும் காலங்கள் சுழல்கிறது நான் காணாத ஒரு மனித வரலாறை நோக்கி...

காலை பொழுது 8.15 மணி 6ஆம் நாள் ஆகஸ்டு மாதம் 1945. அமெரிக்காவின் எனோலா ஹே என்ற போயிங் B- 29 குண்டு வீச்சு விமானம் அந்த அழகிய நகரில் வீசிய "சின்னப் பையன்" என்ற அந்த அணுகுண்டில் பிறந்தது பேரழிவின் பிறப்பிடம். மனித இன வரலாற்றில் பேரழிவை தந்த ஆயுதம். பள்ளிக்கு சென்ற குழந்தையின் சடலம் கூட மிச்சமில்லை. சாப்பாடு கரியாகி உறைந்த நிலை. கட்டிடங்களின் பாகங்கள் ஆவியாக மாறியது. கடிகாரம் நின்றது! காலமே உறைந்தது.. இரண்டாம் உலக யுத்தத்தை நிறுத்திய இந்த வெடிசத்தம் அமெரிக்காவின் ஆதிக்கத்தை துவக்கி வைத்தது!

விடை தேடும் பல கேள்விகள் மனதில்... எதற்காக இந்த உயிர்வேட்டை? உலக யுத்தம் முடிவுக்கு வந்த வேளை அணுகுண்டின் அவசரம் ஏன்? உலகை யார் அடக்கி ஆழ்வது என்ற வெறியில் கருக்கப்பட்டது பல்லாயிரம் உயிர்கள். அந்த வெறி தான் அடங்கியதா? அதன் எல்லை தான் என்ன? பல லட்சம் யூதர்களை கொன்றழித்த ஹிட்லருக்கும், பல்லாயிரம் ஜப்பானியர்களை அழித்த அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ருமெனுக்கும் என்ன தான் வேறுபாடு? அதிகார வெறி கொண்டு அன்று எழுந்த அமெரிக்க தேசத்தின் இரத்த வேட்டை என்றுதான் முடிவுக்கு வரும்?

நினைவுகள் இந்திய தேசம் நோக்கி பறந்தது...

100 கோடி மக்களில் 35% பேர் வறுமையில் வாடும் நாட்டில் எதற்கு அணுகுண்டு? பசித்தவனுக்கு தட்டில் கொஞ்சம் புளூட்டோனியமோ, யுரேனியமோ கொடுக்க முடியுமா? உயிரை கொடுக்க முடியாத நமக்கு எது உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கியது? மனித உரிமை மீறல்களும், வறுமையும், வேலையில்லாமையும், சமூக சீர்கேடுகளுமாக இருக்கும் மனித சமுதாயத்துக்கு தீர்வு அணுகுண்டுதானோ?

அணுகுண்டுகள் வைத்திருப்பது தான் பாதுகாப்பு, அது தான் வல்லமையுள்ள நாட்டுக்கு அடையாளம் என்ற கருத்துக்களை நம்புபவர்களுக்கு சில கேள்விகள். எனது பக்கத்து விட்டிற்கும் எனக்கும் பகை என்றால் என் சக்திக்கு ஏற்ப நானும் ஆயுதங்கள் வைத்திருக்கலாமா? ஆயுதமும் ஆயுதமும் மோதினால் எது தான் வெற்றி பெறும்?

அணுகுண்டு சோதனையில் வெற்றி பெற்ற வேளை விழா கொண்டாடியவர்கள், பசியால் மக்கள் மடிந்தவேளை என்ன செய்தார்கள்? ஒரு கனியும் விளையாத நிலத்துக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து யுத்தம் செய்யும் அவலம் காஷ்மீர் பகுதியில் மட்டும் தான் நடக்கிறது. அணுவெறி கொண்டு அலையும் மானிடர்களே! மனிதம் சுவாசிக்க ஒருமுறை ஹிரோஷிமா நகரம் சென்று வாருங்கள்! புத்தன் பிறந்தும் வராத ஞானம் அணுதாக்குதலின் அழிவில் பிறக்கும்! வருகிறேன் நினைவுகளை சுமந்தபடி...

நினைவுகளுடன்...
திரு

ஆப்பு பிடுங்கும் அமெரிக்கா!

குரங்கு ஆப்பை பிடுங்கிய கதை, புலி வாலை பிடித்த கதை இவை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ பெரியண்ணன் சாட்சாத் அமெரிக்காவிற்கும் அதன் அதிகாரத்தை கையில் வைத்திருக்கிற ஜார்ஜ் டபிள்யூ புஸ் வகையறாக்களுக்கும் துல்லியமாக பொருந்தும். செப்டம்பர் 11ம் 2001ற்கு பின்னர் உலக பயங்கரவாதத்தை ஒழிக்காமல் விடுவோமா பார் என முழக்கமிட்டு உலக மக்கள் மீது அமெரிக்கா யுத்தத்தை திணித்திருக்கிறது. பிரித்தானியா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா துவங்கிய பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் வேதாளம் சொல்லும் கதை போல ஆப்கானிஸ்தான், ஈராக், லெபனான், பாலஸ்தீனம் என நீண்டு கொண்டே போகிறது. இந்த யுத்த நடவடிக்கைகளுக்கு காரணமாக அமெரிக்கா மற்றும் கூட்டு நாடுகள் குறிப்பிடுவது செப்டெம்பர் 11 தாக்குதல்கள்.

செப்டெம்பர் 11 தாக்குதல் எப்படி நடந்திருக்கலாம்? கடத்தல்காரர்கள் விமானங்களை மோதியதில் மட்டுமே இரட்டைக்கோபுரங்கள் தகர்க்கப்பட்டதா? அல்லது வேறு சம்பவங்களும், நடவடிக்கைகளும் துணையாக இருந்ததா? (இந்த கேள்விகளுக்கு விடைகாண ஒளிப்படங்களை பாருங்கள்) http://video.google.com/videoplay?docid=6545313046180631815&q=september+11


செப்டெம்பர் 11 தாக்குதல் தற்செயலானதா? திட்டமிடப்பட்டதா? யார் இதன் பின்னணியில்? எதற்காக இந்த கொடூர வன்முறை? இந்த கேள்விகளுக்கு விடை தேடி சலிப்படைந்திருந்தாலும், விடை கிடைக்காமல் மனதில் மீண்டும் மீண்டும் இந்த கேள்விகள் அலைமோதும். செப்டெபர் 11ற்கு பின்னர் அமெரிக்க அரச அதிபர் ஜார்ஜ் புஸ் முழக்கமிட்ட வார்த்தைகள், World will never be the same! கவனியுங்கள்! “உலகம் இதே நிலையில் இருக்காது”. செப்டெம்பர் தாக்குதலில் இறந்த 3000ற்கும் மேலான அப்பாவிகள் ஏதுமறியாதவர்கள். இந்த தாக்குதல் கண்டிக்கப்படவேண்டிய மனிதநேயமற்ற செயல். அதே வேளை “உலகம் இதே நிலையில் இருக்காது” என்பதன் பொருள் என்ன? அந்த புதிய உலக நடைமுறையை உருவாக்குவதும் தீர்மானிப்பதும் யார்? இந்த கேள்விக்கு விடை காண சீனியர் ஜார்ஜ் புஸ் அவரது ஆட்சியில் முழக்கமிட்ட வார்த்தைகளை கவனியுங்கள் “A new world order will emerge!”. ஆகா, செப்டெம்பர் 11ம் 2001 தாக்குதலுக்கு பத்து வருடங்களுக்கு முன்னர் ஜார்ஜ் புஸ் சீனியர் உதிர்த்த இந்த வார்த்தைகளில் தான் எத்தனை பெரிய தீர்க்கதரிசனம்?

அந்த புதிய உலக ஒழுங்குமுறை என்ன? உலகை அமெரிக்காவின் காலடியில் பணிய வைப்பதா? அமெரிக்கா போதிப்பது மட்டுமே ஜனநாயகம் என்பதா? அமெரிக்க குடிமக்களை ஒரு சில தனியார் முதலாளிகளுக்கும், அவர்களது கருத்தியலுக்கும் சிறைப்படுத்தி வைத்து இது தான் விடுதலை, சுதந்திரம், சமஉரிமை என்பதா? இதற்கு எதிராக குரல் கொடுத்தால் ஆபத்தானவர்களாக சட்டத்தை காட்டி மக்களை முட்டாளாக்கி வைத்திப்பதா? இந்த ஆதிக்கத்தை கென்னடி, ஜிம்மி கார்ட்டர், ரீகன், சீனியர் ஜார்ஜ் புஸ், பில் கிளிண்டன், ஜூனியர் ஜார்ஜ் புஸ் என அனைவரும் தொடர்கின்றனர். அமெரிக்காவின் அரச அதிபர்கள் மாறுவார்கள் ஆனால் அதன் கொள்கைகள், திட்டங்கள், நடைமுறைகள் மாறாது. மக்களுக்காக அல்ல முதலாளிகளுக்காக உருவாக்கப்பட்டது தான் அமெரிக்க அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அனைத்தும். சாதாரண மக்களிலிருந்து அரச தலைவர்களாக அமெரிக்காவில் வருவது இயலாத அளவுக்கு அமெரிக்க ஜனநாயகம் தளைத்தோங்குகிறது. பல வியாபார நிறுவனங்களில் பங்கு வகிக்கிற ஜார்ஜ் புஸ், கேன்டலிசா ரைஸ், டிக் செனாய், ரொனால்ட் ரம்ஸ்பீல்ட் இவர்கள் தான் இன்று அமெரிக்காவின் உயர் பதவிகளில் கொள்கைகள், வெளியுறவு, இராணுவ நடவடிக்கைகள், பொருளாதார திட்டங்களை தீர்மானிப்பவர்கள். பாவம் அமெரிக்க குடிமக்கள் இவர்களின் சூழ்நிலை கைதிகளாகி வியாபாரிகளினால் வழிநடத்தப்படும் ஊடகங்களின் உளறல்களே உண்மை என நம்ப வைக்கப்படுகிறார்கள். இதற்கு சரியான உதாரணம் ஈராக் பற்றிய அமெரிக்க மக்களின் நிலை!

*******

உலகை இரசாயன மற்றும் உயிரியல் தாக்குதலிலிருந்து காக்க சதாம் உசேனை அழித்து அங்உ ‘ஜனநாயகத்தை உருவாக்கினால் தான் தீர்வு என செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் முழக்கமிட்டார் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஸ். ஈராக் முழுவதும் மிக கொடிய உயிரியல், இரசாயன ஆயுதக்குவியல் இருப்பதாக மீண்டும் மீண்டும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் பரப்புரை செய்தது. அதற்கு துணையாக தொலைக்காட்சி, பத்திரிக்கை ஊடகங்கள் கதைகள் எழுதி வாசித்தன. உலக நாடுகள்ம் ஐ.நா.சபை அனைத்தின் எதிர்ப்பையும் மீறி ஈராக் மீது படையெடுத்த சில வாரங்களில் இரசாயனம் உயிரியல் ஆயுதங்கள் பற்றிய பேச்சுகள் கூட இல்லாமல் யுத்தத்தின் காரணத்தை திசைதிருப்பியது அமெரிக்கா. அமெரிக்கா அறிவித்தது போல எந்த ஆயுதங்களும் ஈராக்கில் இல்லை என்பது தான் உண்மை. ஈராக் பொருளாதாரத்தை, வளங்களை சிதைத்து அமெரிக்க இராணுவ நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு அடிமையாக அந்நாட்டு மக்களை வைத்திருக்கிறது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைகள் மற்றும் மனிதநேயமற்ற செயல்கள் வழி அபுகிரேப் சிறைக்கொடுமைகள் முதல் பாலியல் வன்முறைகள் என அதன் மானம் ஈராக்கில் அம்மணமாகி அலங்கோலக் காட்சியளிக்கிறது. அதன் தொடர்ச்சி சகோதர யுத்தத்தை ஈராக்கிய மக்கள் மீது திணித்திருக்கிறது. இந்த இழப்புகளை உருவாக்கியது யார்? பொய்யான காரணம் சொல்லி பல லட்சம் மகக்ளை கொன்று குவித்து அந்நாட்டு வளங்களை அழித்து கொலைக்களமாக மாற்றிய போர்க்குற்றம் புரிந்த நாட்டின் தலைவர்களுக்கு ஹேக், சர்வதேச நீதிமன்றத்தில் எப்போது விசாரணை துவங்கும்?


திரு