Tuesday, January 27, 2009

தமிழீனம்: ஒரு இனத்தின் அழிவு!


வன்னி நிலப்பரப்பில் கொல்லப்படும் தமிழர்களுக்காக குரல்கொடுத்து தசைகளில் வாயு பிடிப்பு அழுத்த ‘தமிழீனத்தலைவர்’ மருத்துவமனையில் ஓய்வெடுக்கிறார். தமிழர்கள் கொல்லபட்ட பிறகு பிப்ருவரி 15 தி.மு.க செயற்குழுவில் அறிக்கையில் கண்ணீரை கொட்டவும், கவிதையில் நீலிக்கண்ணீர் வடிக்கவும் தொல்காப்பியம், சங்கத்தமிழில் சொற்கள் ஆய்வில் இருக்கிறார் தலைவர். உடன்பிறப்புகளுக்கு எழுதும் கடிதத்தில் சோனியா அம்மையார் மௌனமாக தமிழர்களை படுகொலை செய்தாலும், மகள் கனிமொழியிடம் அணுக்கமாக குசலம் விசாரித்ததையும் எழுதுவார்.

பாராளுமன்ற தேர்தலில் கோடிகளை கொட்டி, பிறகு மொத்தமாக தமிழக மக்களின் வளங்களை கொள்ளையடிப்பது எப்படி என்னும் ஆழ்ந்த யோசனையில் ஜெயலலிதா. ‘தமிழின படுகொலை தமிழக மக்களிடமிருந்து கருணாநிதி அனுப்பிய அரிசியிலிருந்த கற்கள் தலையில் விழுந்து செத்துப்போனார்கள்’ என்று தலைவியின் அறிக்கை வரும்.

சோனியாவும், மன்மோகனும் ஈரோடு வழியாக கொழும்புவிற்கு அனுப்பிய டாங்கிகள் பற்றிய செய்தி அம்பலமானதால் தமிழகத்தில் கிளர்ச்சி வராமல் ‘படம் காட்ட’ (தமிழகத்தின் வற்புறுத்தலுக்கு பிறகும் கொழும்பு சென்று போர் நிறுத்தம் செய்ய தேதி குறிப்பிடாமல் இருந்தவர்) பிரணாப் முகர்ஜி அவசர பயணம் புறப்பட்டிருக்கிறார். ‘போரை நிறுத்த அவசியமில்லை. எப்படி உலகத்தின் கண்களையும், ஊடகங்களையும் மறை(று)த்து பெருமளவில் தமிழ் மக்களை கொல்வது’ என்று கோத்தபாய ராஜபக்சேவுக்கும், பொன்சேகாவுக்கும் பாடம் நடத்துவார். ‘நாடகத்தை’ நடத்துவது எப்படி என்பது பற்றி தலைவர் கருணாநிதியிடம் தொலைபேசியில் பாடம் பெற்றிருக்கிறார்.

செத்துக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு வெற்று அறிக்கைகளை எழுதி குவித்து, பிப்ருவரி 13ல் உண்ணாவிரதம் இருந்து முக்கி முக்கி உரையாற்றுவார் புரட்சிப்புயல் வைகோ. 2 வருடங்களாக இன அழிப்பை தடுக்க தமிழகத்தில் மக்களமைப்பு எதையும் உருவாக்க தவறியதில் தனது பங்கு பற்றி பேசாமாட்டார் அண்ணன் என்பதையும் நம்பலாம். உண்ணாவிரதம் முடிந்த கையோடு ஜெயலலிதாவின் தமிழின விரோத அரசியலுக்கு ஆள்பிடிக்க துவங்கிவிடுவார்.

ஈழத்தமிழர்கள் பற்றிய அறிக்கைகளும், பேச்சுக்களும் தந்து நாளேடுகளையும், தொலைக்காட்சிகளையும் பரபரப்பாக வைத்திருப்பார் மருத்துவர் அய்யா.

‘எந்த போராட்டம் ‘கலைஞரையும்’, சோனியாவையும் அசைக்கும்? சிறுத்தைகள் புலியாக மாறலாமா?’ சிந்தனையில் திருமா.

‘தேர்தலில் கூட்டணி இல்லை’ தமிழர்கள் படுகொலைக்கு தீர்வாக அறிவிப்பார் விஜயகாந்த்.

‘ஆங்! நாங்க அப்பவே சொன்னம். நீங்க தான் கேக்கலை. இதுக்கு புலியள் தான் காரணம். புலியளை விடுங்கோ! எங்கள்ட்ட வாங்கோ! நாங்க காப்பாத்துறோம். 1917 அக்டோபர் புரட்சியில….’ பக்கங்களை நிறைப்பார்கள் நேரத்தை பயன்படுத்தும் ‘புலியெதிர்ப்பாளர்கள்’.

‘வாங்கோ! கருணாநிதி வாங்கோ. எங்கட கூட வாங்கோ. தமிழீழத்துக்காக இதுவரை 10000245 தடவை நான் கடிதம் எழுதிப் போட்டன். இந்தியா செய்த ஒப்பந்தத்தில தான் எங்கட சீவன் இருக்குதுன்னு காட்டுறன். புலிகளை ஒழிச்சா தமிழீழம் கிடைச்ச மாதிரி. அதுவரை எங்கட சனம் செத்தாலும் கண்டுக்காதைங்கோ…’ கருணாநிதிக்கு கடிதம் எழுதி தினமலருக்கு அனுப்புவார் ஆனந்தசங்கரி.

‘நான் அமைச்சராகி போட்டனல்லோ. சனத்துக்கு வேற என்ன பிரச்சனையாம்?...’ டக்ளசின் அறிக்கை வரும்.

‘நான் எம்.பி ஆகி போட்டனல்லோ. இனி எங்கட கிழக்கு சனத்துக்கு என்ன பிரச்சனையாம்? நாங்க சிங்களவன்ற கூட போன பின்னக்கெ தான் நெறய சனத்த கொல்றுத பத்தி சொல்லி கொடுத்தம். உதுக்கெல்லாம் பயப்படாம சனம் ஆர்மி கூட….’ கருணாவின் கதை தினமலரில் நேர்காணலாக வரும்.

‘தமிழன் எல்லாவனும் பயங்கரவாதி. நானும், நீங்களும் மட்டும் காந்திக்கு கைபிடிச்சு பிரிட்டிஸ்காரனுக்கு அறிமுகம் செஞ்சவங்க. மிச்சமிருக்க தமிழனுகளையும் அழிச்சிப் போடுவம். அதுவும் சொலபம்….’ இராஜபக்சேயின் நேர்காணலை ‘மவுண்ட்ரோடு மார்க்சிஸ்ட்டின்’ நாளேட்டில் பிரதான செய்தியாக சப்புக்கொட்டி வரும்.

‘ஆயுதங்களை ஒப்படைக்க மாட்டோம்! தொடர்ந்து போராடுவோம்!’ நடேசனின் அறிக்கை வரும்.

தமிழ் மக்கள் நூற்றுக்கணக்கில் இனப்படுகொலையில் அழிந்து கொண்டிருப்பர்!

000

Nimalka Fernando, Human Rights Lawyer, Colombo to BBC

“From the manner in which the Sri Lankan government developed its military strategy over the past few years, it was very clear that they were not interested in coming to any political negotiation.


There was never any hope from my side that President Mahinda Rajapaksa would deliver any political solution to the ethnic conflict because the whole psyche of the Rajapaksa regime is a psycho of being a victor.

If you look at the songs that were written about him during his election campaign - they were calling him the king. If you have a king, you must have a kingdom.

The latest developments can be described as a geographical victory. But this is not the end of the struggle for Tamil nationalism in Sri Lanka.

Nor will this provide a solution to the aspirations of the Tamil people as well as the aspirations of the Sinhala people who want a democratic country, democratic values, media freedom, human rights protected.

The actual struggle for Tamil nationalism will take a different form. Those who are lighting crackers in celebration have been given crackers for free by the civil defence corps. I am yet to find a poor Sinhalese family go into a shop to buy crackers.

This will definitely not bring security to Sri Lanka. This is a short-term military strategy that has gained access to certain territories that the army couldn't go hitherto. That has not given a solution to the ethnic conflict in this country.

We will see another cycle of violence.”

2 பின்னூட்டங்கள்:

தமிழ் said...

ஆட்சி பிடித்து
ஆடி கொண்டு இருப்பவர்களுக்கு
அவலங்களும்
அழுகைகளும்
தெரிய போவதில்லை
தீரவும் போவதில்லை
செத்துக் கொண்டுபவர்கள் பற்றி
செய்திகள்
தினமும் நாளிதழ்களில் நாம்
பார்த்துக் கொண்டு தான்
இருக்க முடியும்

சவுக்கடி said...

எழுதியவை சரியே!

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com