Saturday, May 23, 2009

ஈழம்: நாங்கள் கொலைகாரர்கள்! - இறுதிப் பாகம்


அமெரிக்காவின் நட்பு நாடான பாகிஸ்தான் இருந்து வந்தது. 1990களின் உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையில் துவங்கி ஜார்ஜ் புஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் ராணுவ ஒப்பந்தம் மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்கள் வழியாக அமெரிக்காவின் நிலையான நண்பனாக இந்தியா மாறியிருக்கிறது. அமெரிக்கா மற்றும் இதர மேற்குலக நாடுகளுக்கு ஆசியாவில் நிரந்தரமாக பலமுள்ள நட்பு சக்தியாக சீனாவை எதிர்கொள்ள இந்தியா அவசியம். பொருளாதார ரீதியாக இந்தியாவின் சந்தை, உற்பத்தி, குறைந்த ஊதியத்திற்கு உழைக்க காத்திருக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களின் மனித வளம், இயற்கை வளங்கள் அனைத்தும் மேற்குலகிற்கு அனுகூலமானவை. சமாதான முயற்சியில் மூன்றாம் தரப்பாக செயல்பட்ட நோர்வே நாட்டின் முதலீடுகள் இந்தியாவில் (நிறுவனங்களின் பட்டியல் விபரங்கள்: http://www.norwayemb.org.in/business/busind/database.htm) உள்ளன. சிறீலங்காவுக்கு ஆயுதங்களை கொடுத்து தமிழ்மக்களது தாயகநிலம், அரசியல் உரிமைகள், போராளி இயக்கங்கள் ஆகியவற்றுக்கு எதிரான இந்தியாவின் திட்டத்திற்கும் அடிப்படை காரணம் இலங்கையில் இந்திய முதலாளிகளின் முதலீடுகள். உலகமயமாக்கல் பொருளாதாரச் சுரண்டல் பரஸ்பரம் புரிதலுடன் ஏகாதிபத்தியங்களும், பிராந்திய வல்லரசுகளும் தேசிய இனங்களையும், அரசியல் உரிமைப் போராட்டங்களையும் அழிக்க ‘பயங்கரவாத’ அரசியலையும், ‘மனிதாபிமான’ வேடத்தையும், ‘சமாதானப் பேச்சுக்களையும்’ பயன்படுத்துகிறது. ஈழம் இன்று நமக்கு தரும் பாடமிது.

புலம்பெயர் நாடுகளில் தமிழ்மக்கள் போராட்டங்கள் எழுச்சி பெற்ற பிறகு வேறுவழியில்லாமல் மேற்குலக நாடுகள் சிறீலங்கா மீதான கண்டனங்களை தெரிவிக்க துவங்கின. அவை செயலாக வடிவம் பெறவதும் தமிழர்களின் தொடர்ச்சியான போராட்டப் பாதையிலிருக்கிறது. தமிழ்மக்களின் போராட்டம் சிறீலங்கா, சீனா, ரஷ்யா ஆகியவற்றின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வேளையில் இந்தியாவின் நயவஞ்சக நாடகங்களையும் எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது.

இந்திய அதிகாரவர்க்கத்தின் குரல்கள் நம்பியார் சகோதர்கள். விஜய் நம்பியாரின் இலங்கைக்கான முதல் பயணம் முடிந்த சில நாட்களில் சதீஸ் நம்பியாரின் இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை வெளிவந்தது கவனிக்க வேண்டியது. இந்திய வெளியுறவுக் கொள்கையின் முகம் நம்பியார் சகோதர்கள். வன்னியில் தமிழ்மக்கள் மீது பாரபட்சமில்லாது பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி போர்க்குற்றங்களையும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையும் மகிந்தா ராஜபக்சே அரசு செய்திருக்கிறது. மகிந்தாவின் அரசுக்கு சகலவிதங்களிலும் உதவிய இந்தியாவின் அதிகாரிகள் எவரையும் இலங்கை விவகாரங்களில் ஈடுபடுத்துவது மனித உரிமைக்கு எதிரான குற்றங்களுக்கும், அநீதிக்கும் துணை போகும். இந்தியாவின் கைகளில் பல ஆயிரம் தமிழர்களை கொன்றொழித்து, ஈழத்தை கந்தகபூமியாக மாற்றிய இரத்தக்கறை படிந்துள்ளது.

வெளியுறவுக் கொள்கையும், அதிகாரவர்க்கத்தின் மனப்பாங்கும் மாறும் வரையில் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளை பெற்றுத் தர இந்தியா நேர்மையான பங்கு வகிக்க முடியாது. குறைந்தபட்சம் ஒரு நல்ல மூன்றாம் தரப்பு நாடாக கூட செயல்பட முடியாது. இந்தியாவின் பூகோள அரசியல் மட்டுமல்ல; சமூக, அரசியலும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக உள்ளது. இந்திய அதிகார வர்க்கத்தையும், அரசியல்வாதிகளையும் ஈழத்தமிழர்கள் இனியும் நம்ப முடியுமா?

-முற்றும்-

குறிப்பு: இந்தியா, ஐ.நா, மேற்குலகம் தொடர்பான அதிகாரவர்க்கத்தின் பார்வையை கூர்மைப்படுத்துவதற்காக இந்த பதிவுகள். இந்திய முதலாளித்துவம் மற்றும் பார்ப்பனீயத்தின் பங்கை இக்கட்டுரை தொடவில்லை.

3 பின்னூட்டங்கள்:

Suresh Kumar said...

இந்தியா, ஐ.நா, மேற்குலகம் தொடர்பான அதிகாரவர்க்கத்தின் பார்வையை கூர்மைப்படுத்துவதற்காக இந்த பதிவுகள் //////////////

அருமையான பதிவு

கானா பிரபா said...

வணக்கம் திரு

இன்னும் முழுமையாக எல்லாப் பகுதிகளையும் படித்து முடிக்கவில்லை, காலத்துக்கேற்ற பதிவாக விரிவான தகவல்களோடு எழுதியிருக்கிறீர்கள் என்பதை ஆரம்பப் பகுதிகளைப் படித்த போது உணரக் கூடியதாக இருந்தது. இந்தப் பதிவுகள் பலரை எட்ட வேண்டும்.

Anonymous said...

அருமையான பதிவு
Thannks
Arun

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com