Tuesday, February 10, 2009

பெப்ருவரி12: ஈழத்திற்காக புதுடில்லியில் பாராளுமன்ற முற்றுகை!

சோனியாவின் வழிகாட்டுதலிலும், கருணாநிதி மற்றும் மருத்துவர் ராமதாசின் ஆதரவுடனும் இயங்குகிற இந்திய பேரரசு மிக கோழைத்தனமான, மறைமுக யுத்தம் மூலம் சிங்கள பேரினவாத அரசுடன் இணைந்து தமிழின அழிப்பை ஈழத்தில் அரங்கேற்றி வருகிறது.

இந்திய அரசை கண்டித்து ஈழத்தமிழர் தோழமைக்குரல் அமைப்பினர் பாராளுமன்ற முற்றுகை, உண்ணாநிலை போராட்டம், கருத்தரங்குகளை நடத்த புதுடில்லிக்கு பயணமாகியுள்ளனர். புதுடில்லி வாழ் தமிழர்களும், தேசிய இனங்களின் விடுதலையில் ஆர்வமுடையவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கலந்துகொள்ளுங்கள்.

புதுடில்லியில் நடைபெற இருக்கிற போராட்டங்கள் பற்றிய செய்தி மற்றும் தொடர்புகளை நண்பர் ஜமாலனின் பதிவில் காணலாம்.

(12.02.2009) பாராளுமன்றத்திற்கு முன் பேரணி மற்றும் முற்றுகை போராட்டம் நடைபெறும். அவற்றில் எழுப்பப்படும் கோரிக்கைகள்:

இந்திய அரசே,
1. ஈழத் தமிழர் மீது சிங்கள அரசு நடத்தி வரும் இனப்படுகொலைப் போருக்கு துணை செய்யாதே!
2. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கு!
3. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைகளை நீக்கு!
4. தமிழீழ மக்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்!
5. கொல்லப்பட்ட தமிழ் மீனவர்களுக்காக இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடு!

தொடர்புக்கு அமைப்பாளர்கள்
லீனா மணிமேகலை, 9841043438.
பா.செயப்பிரகாசம், 9444090186.http://www.blogger.com/post-create.g?blogID=8258510

கூடுதல் தகவல்களுக்கு நக்கீரன் செய்தி2000பேர் பங்கேற்கும் போராட்டம்: படைப்பாளிகள், மாணவர்கள் டெல்லி புறப்பட்டனர்

ஈழத்தமிழர் நலன் காக்க இந்திய பாராளுமன்றத்தை முற்றுகையிடுவோம்

1 கருத்துக்கள்:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com